Sunday, July 23, 2017

கொம்புக்குதிரை... கிராஃபிக் நாவல்களின் சிம்ம சொப்பனம்...!







அநேகமாக தமிழில் ஸ்கான்லேஷன் செய்யப்பட்ட முதல் காமிக்ஸ் இதுதான் என்று நம்புகிறேன்.  அல்லது சிக்கன் வித் ப்ளம்ஸ், ஜானி ப்ரீக்   என்று வேறு கதையாகவும் இருக்கலாம்.

கிரஃபிக் நாவல் என்றாலே டவுசரை நனைப்பவர்களுக்கு , இத்தொடர் ஒரு சிம்ம சொப்பனம்,,,

சில ஆண்டுகள் முன்பே கொம்புக்குதிரையின் அனைத்துப் பாகங்களையும் டவுன்லோட் செய்து வைத்திருந்த போதும் , அதை வாசிக்க ஆரம்பித்த போதெல்லாம், வேறு கதைகள் வாசிக்கக் கிடைக்கும் போது , கொம்புக்குதிரையை அந்தரத்தில்  விட்டு விடுவது எம்முடைய வழக்கமாக இருந்தது.

ஆக்ஷன், அதிரடி என்ற விறுவிறுப்பான கதைகளுக்கு பழகிப் போன என்னால்  கொம்புக்குதிரையின்  ஆழ்ந்த நுட்பமான படைப்புக்கு ஈடு கொடுக்க முடியவில்லை  என்பதை ஒப்புக்கொள்ள எனக்கு தயக்கமேதும் இல்லை.

இப்போதும் மேலோட்டமான புரிதல்தான் உள்ளது.  கதையின் நுனுக்கமான  விபரங்கள் புரியவில்லைதான் என்ற போதும் ,  மீள் மீள் வாசிப்புகள்  என்றேனும் ஒரு தெளிவான புரிதலை  தரும் என்று நம்புகிறேன்.

இத்தனை கடினமான படைப்பை  தமிழ் வாசகர்களுக்காக தன் நேரம், உழைப்பு, பொருள் என பிரதி பலன் எதிர்பாராது செலவழித்து மொழிபெயர்த்து அளித்த அன்பு நெஞ்சத்தை எவ்வளவு பாராட்டினாலும்  என் நெஞ்சம்  திருப்தி கொள்ளாது.

கடுமையான இந்த முயற்சியை எடுத்துச்சொல்ல சரியான உவமைகள் இல்லை. ஆனாலும்... எம்மால் முடிந்தது................


நன்றிகள் சார்!

































Sunday, July 16, 2017

கதைகள் முடிந்து விடும் கேள்விகள் முடிவதில்லை...!



பராகுடாவின் ஆறு பாகங்களையும் மீள் வாசித்த இந்நாட்களில்  ஏகப்பட்ட கதாபாத்திரங்களிடையே உலவிக் கொண்டிருந்தேன்.  ஒவ்வொருவரிடமும்தான் எத்தனை அனுபவங்கள்...

சிறந்த படைப்புகள் அதன்  உண்மையான தரத்துடன் தமிழ் வாசகனை அடைய வேண்டும், தான் அனுபவித்த ஒரு அற்புத வாசிப்பு அனுபவத்தை சக வாசகனும் பெற வேன்டும். என்ற உயர்ந்த நோக்கத்தில்  தங்கள் நேரங்களையும் உழைப்பையும் செல்வத்தையும் செலவழித்து ஆறு பாகங்களையும் மிகவும் தரமாக மொழிபெயர்த்து,  லாப நோக்கமின்றி அன்பளிப்பாக தமிழ் வாசகர்களுக்கு வழங்கியவர்களின் அன்பிற்கு நன்றி சொல்கிறேன்.

கதையில் சில கேள்விகள் பதிலின்றி நிற்கின்றன, அவை  விடை காணப்படாமலே போகக்கூடும். அல்லது ''இரத்தப்படலம்'' கிளைக்கதைகள் போல சில பாகங்கள் தொடரவும் வாய்ப்புள்ளது.


சிகப்பு ராஜாளி, நேர்வீச்சு ஜீன் இவர்களின் கடந்த கால கதை என்ன?


மூடுபனியை (புகார்) பயன்படுத்தி எதிரியின் கலத்தை நொறுக்கும் பிளாக்டாக்கின் அபார யுக்தி.


இருவரில் ஒருவர்தான் வாழ முடியும் எனும் அளவுக்கு  ஆழ பதிந்த வன்மம் வாள்மதியின் முடிவுக்கான காரணமாகிறது.


யார் இந்த வாள்மதி?


 என்ன ஒரு திறமைசாலி! டவுசர் நழுவுவது இவனது வாடிக்கை.





எஸ்டபானின் கதை என்ன?








அரும்பொக்கிஷங்கள் ஆழ் மர்மங்களின் சொத்து!


வெண்துறையின் கட்டுகளிலிருந்து ராஃபி விடுபட்டாலும் வேறொன்று அவனை பினைக்கிறது.

எமிலியோ