Saturday, December 4, 2021

10 விஷம்

 ...தற்செயல் என்று எதுவும் இல்லை. தற்செயல் மாயை மட்டுமே...



     
🔎  American shock experiment 




1961ல் டாக்டர் ஸ்டான்லி மில்க்ராம் எனும் மனோதத்துவ நிபுனரால் உண்மையாகவே நடத்தப்பட்ட சோதனை இது.


இந்த பரிசோதனை பற்றிய விபரம் மதன் எழுதிய மனிதனுக்குள் ஒரு மிருகம் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.




Vயால் தாக்கப்பட்டவர்களில் டாக்டர் டெலியா சர்ரிட்ஜ் மட்டும் தான் அவர் செய்ததற்காக வருத்தப்பட்டார். அவனுக்கும் மற்றவர்களுக்கும் தான் இழைத்த கொடுமைகளுக்கு, தான் மரணத்திற்கு தகுதியானவள் என்று கூட அவர் உணர்கிறார். 
வலியோ அவமானமோ இல்லாத ஒரு மரணத்தை டாக்டர் சர்ரிட்ஜுக்கு V தேர்வு செய்தது அவரது அணுகுமுறையின் காரணமாக இருக்கலாம். உண்மையில், டாக்டர் சர்ரிட்ஜ் மற்றும் V இடையே அவரது வாழ்க்கையின் இறுதி தருணங்களில் ஒரு விசித்திரமான நெருக்கம் உள்ளது, அவர் இறக்கும் போது V அவருடன் அமர்ந்து பேசுகிறான். டாக்டர். சர்ரிட்ஜ், V இன் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று கடைசி வேண்டுகோளாகக் கேட்கும் போது அவருக்கு தனது முகத்தைக் காண்பிக்கிறான்.

டெலியா இறப்பதற்கு முன் Vயின் முகம் அழகாக இருக்கிறது என்று கூறிய கருத்து கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று. 

டெலியா சர்ரிட்ஜின் டைரியில் அதே கருத்து எதிர்மறையாக இருக்கும்.

டெலியா சர்ரிட்ஜ் ஒரு நடுத்தர வயது மருத்துவர், அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு லார்ஹில் முகாமில் பணிபுரிந்தார் . அவர் ஒரு திறமையான மருத்துவர், அவர் மனித மனதையும் உடலையும் மாற்றக்கூடிய மருந்துகளை ஆராய்ச்சி செய்து, அவற்றை லார்ஹில் நோயாளிகளுக்கு வழங்கினார், அவர்களின் வேதனையும் மரணமும் தனது ஆராய்ச்சியின் பெரிய நன்மைக்காக இருக்கும் என்று நம்பினார். லார்ஹில் முகாமில் தனது அனுபவங்களைத் தொடர்ந்து டெலியா தனது சோதனைகள் காட்டுமிராண்டித்தனமானவை என்பதை உணர்ந்தார்.  டெலியாவின் மரணம் கிராஃபிக் நாவலில் ஒரு திருப்புமுனையாக அமைகிறது, ஏனெனில் அது எரிக் ஃபின்ச்சின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அவர் நோர்ஸ்ஃபயர் அரசாங்கத்தில் தனது இடத்தை மறுபரிசீலனை செய்யவும், லார்கில் வதைமுகாமுக்குச் செல்லவும்...




குடிபோதையில் தன் மனைவியிடம் வெற்றுத் துப்பாக்கி மூலம் குரூரமாக விளையாடிய டெரக் அல்மோன்ட் Vயை வேட்டையாடக் கிளம்பியபோது துப்பாக்கியில் குண்டுளை நிரப்ப மறந்து விட்டான். அவனது விளையாட்டு அவனுக்கே வினையாகிப் போனது.



டெரெக் அல்மோண்ட் நோர்ஸ்ஃபயரின் சட்ட அமலாக்கத் துறையான ஃபிங்கரின் தலைவர் . அவர் ஒரு கொடூரமான மனிதர். இருப்பினும் மறுக்கமுடியாத திறமையான சட்ட அமலாக்க அதிகாரி. பல நேரங்களில், அவர் தனது மனைவி ரோஸ்மேரியை கொடுமைப்படுத்துகிறார்.
அவரது மரணம் தொடர்ச்சியான பல நிகழ்வுகளைத் தூண்டுகிறது. அவரது மென்மையான மனைவி கொலை செய்ய தயாராவது வரை...

தீமையின் உருவங்களான
லூயிஸ் புரோதெரோவும் அந்தோணி லில்லிமனும் Vயால் தாக்கப்பட்டபோது ஒரு துப்பறிவாளர் என்ற மனோநிலையில் மட்டுமே அவற்றை எதிர்கொண்ட ஃபின்ச் டெலியா சர்ரிட்ஜின் மரணத்தின் போது தளர்ந்து போகிறார். 
அந்த தளர்வின் பின்னே ஒரு கதை உண்டு.











 தொடரும்...


Monday, November 29, 2021

9, வன்முறை

 ...அதோவொரு பெண். அவள் தள்ளுவாள்; இழுக்கமாட்டாள். தந்தையின் அன்புக்கு ஏங்குவாள். இந்தக் கையுறைக்குக் கீழிருக்கும் கையைத்தான் ஒருவேளை பிடிக்க வேண்டியிருக்கும் என்று அவள் நம்புகிறாள்.

 விருந்தளிப்பவரின் ஒழுக்கங்களை அவள் சந்தேகித்தாலும், வெளியில் குளிரில் இருப்பதைவிட பிடித்ததைச் செய்யும் நிலத்தில் மேலும் தளர்வாய் இருப்பதை உணர்கிறாள்...


"வெளியில் குளிரில்" (அக்கறையற்ற உலகில்)


தாமஸ் பிஞ்சனின் V நாவல்




ஈவி மதகுரு லில்லிமனின் கொலைக்கான உடந்தைக் குற்றத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சிக்கிறாள். ஆனால் அவளே துப்பாக்கி ஏந்தும் காலம் ஒன்றும் வரும்.





யாரும் சந்தேகித்திருப்பதற்கும் அதிகமானவை Vக்குப் பின்னாலும் உள்ளுக்குள்ளும் உள்ளன. யார் என்பதல்ல. என்ன என்பதுதான்: அவள் என்ன.


இந்த  வரிகள் V ஒரு பெண்ணா?  என்ற  குழப்பத்தை வாசகருக்கு ஏற்படுத்தலாம், உண்மையில் இது தாமஸ் பிஞ்சன் 1963ல் எழுதிய V நாவலில் இருந்து ஒரு  மேற்கோள் ஆகும், அந்த நாவலில் V என்ற பெயரில் ஒரு மர்மமான பெண் கதாபாத்திரம் உள்ளது. 

பிஞ்சனின் நாவலில் V என்ற கதாபாத்திரம் ஒரு நிரந்தரமான மழுப்பலான சிந்தனையாகும். நாவல் V பற்றி எந்த உணர்வும் இல்லாமல் முடிவடைகிறது. 

பல விதங்களில், ஆலன்மூரின் V தாமஸ் பிஞ்சனின் V கதாபாத்திரத்தைப் போலவே உள்ளது. 

பல கதாபாத்திரங்கள் தங்கள் சொந்த காரணங்களுக்காக துரத்தப்படும் ஒரு கருத்தை அவள் பிரதிநிதித்துவப்படுத்துகிறாள், ஆனால் அவளது உண்மையான அடையாளம் எப்போதும் மர்மமாகவே இருக்கும். 

இந்த மேற்கோள் ஆலன்மூரின் Vயின் அடையாளமும் அதேபோன்று ஒருபோதும் வெளிப்படுத்தப்படாமல் போகக்கூடிய வாய்ப்பு இருப்பதைக் காட்டுகிறது.





Enid Blyton In A f faraway tree

V ஈவிக்கு  ஒரு தந்தை தன் மகளுக்கு கதை சொல்லி உறங்க வைப்பதைப் போன்று 
A faraway tree (தொலைதூரத்தில் உள்ள மரம்) புத்தக வரிசையின் 
The land of do as you please (நீங்கள் விரும்பியபடி செய்யும் நிலம்.)   
சிறுவர் கதையை வாசித்து உறங்க வைக்கிறான். 

ஈவி மனதளவில் இன்னும் சிறுமியாகவும் தந்தை மீதான ஏக்கங்கள் நிறைந்தவளாகவும், Vயின் இரகசியக் கலைக்கூடம் எனும் பாதுகாப்பான நிலத்திலிருந்து வெளியேறி சோதனைகள் நிறைந்த உண்மையான உலகை எதிர்கொள்ள  அஞ்சுபவளாகவும் இருக்கிறாள்.


//இந்த நிலம் சீக்கிரமே நகர்ந்துவிடும். என்னதான் நன்றாக இருந்தாலும், நாம் இங்கேயே எப்போதும் வாழ முடியாது.//


பாரவேட்ரீ கதையிலிருந்து V ஈவிக்கு வாசிக்கும் இந்த வரிகளுக்கு ஒரு மறைமுமான அர்த்தமும் உண்டு.



டெரக் அல்மோன்ட் தன் மனைவியை நடத்தும் விதங்களும்,   மேஜையில் காட்சிப்படுத்தப்படும் மதுப்புட்டியும் அவனைப்பற்றிய சித்திரங்களை வாசகனுக்கு வழங்குகிறது.
 அவன்  வன்முறை நிறைந்த ஒரு துராத்மா.



மருத்துவர் டெலியா சர்ரிட்ஜ்க்கு ஒரு வயலட் கார்சன் ரோஜா பழைய சம்பவங்கள் சிலவற்றை நினைவூட்டுகிறது, 
அவள் எப்போதும் குற்றவுணர்வுடன் நாட்களை தள்ள காரணமாகிய பழைய சம்பவங்களை...

********



தொடரும்...






Sunday, November 14, 2021

8, சமவெளி


...மரணத்தின் நிழல்  படர்ந்த சமவெளியில்  நடந்தாலும் தீமையைக் கண்டு நான் அஞ்சமாட்டேன்...





லில்லிமன் போன்ற அரசு உயரதிகாரிகளும் கூட அரசால் கண்காணிக்கப் படுகின்றனர் என்பதை இந்தக்கட்டம் விளக்குகிறது.



வியின் கொலை பாணியை ஃபின்ச் புரிந்து கொள்ளத் தொடங்குகிறார்.  பீத்தோவனின் இசை, ரோஜாக்கள் போன்றவை அரசாங்கத்தால் அழிக்கப்பட்ட கலாச்சாரம் மற்றும் அழகை அவருக்கு நினைவூட்டுவது போல இருக்கிறது. 





வி மற்றும் மதருவின் குரல்களை பகுப்பாய்வுக்காக பிரித்தெடுக்க முடியாத அளவுக்கு பின்னணியில் வி பீத்தோவனின் ஐந்தாவது சிம்பொனியை எழுப்பியதால், வி பிஷப்பைக் கொன்ற பதிவிலிருந்து உரையாடல்களை சேகரிக்க சிரமப்படுகிறார்கள். பீத்தோவனின் ஐந்தாவது சிம்பொனியின் தொடக்கமானது "V" என்ற எழுத்துக்கான  தந்திக் குறியீடு என்று ஃபின்ச் சுட்டிக்காட்டுகிறார்.


Da Da Da Dum ஐந்தாவது சிம்பொனி ரோமன் எண்ணில் V

ஐந்தாவது சிம்பொனி பற்றி பீத்தோவனிடம் அவரது உதவியாளர் கேட்டபோது, அது 'விதி கதவைத் தட்டும் சத்தம்' என்று கூறினார்.

YouTube link :

Da Da Da Dum



லில்லிமனின் சிறுமிகள் மீதான உடலுறவு ஆசை பற்றி எரிக்ஃபின்ச்சும் அறிந்தவராகவே உள்ளார்.

எரிக்ஃபிஞ்ச் முந்தைய இரவில் நடந்ததை மறுகட்டமைக்க முயற்சிக்கிறார். மதகுரு லில்லிமன் தனது அறையில் ஒரு சிறுமியுடன் தனியாக இருந்தார். அவள்  Vன் கூட்டாளியாக இருக்கலாம் , ஏனென்றால் அவள் எங்கும் காணப்படவில்லை.

அது ஈவி ஹம்மான்ட் என்பது நமக்குத் தெரியும்.



"நான்தான் சாத்தான். சாத்தானின் வேலையைச் செய்ய வந்திருக்கிறேன்."

இது ஒரு மேற்கோள். நடிகை ஷரோன் டேட் ( sharon tate) கொலை வழக்குடன் தொடர்புடையது.


சார்லஸ் மேன்சன் ( charles monson) 1960 களின் பிற்பகுதியில் கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ஒரு வழிபாட்டு முறையான மேன்சன் ஃபேமிலியை வழிநடத்திய ஒரு அமெரிக்க குற்றவாளி . 

 வன்முறை, போதை மருந்து, கட்டற்ற பாலியல் உறவு என்று அவரும் அவரது குழுவினரும் ஹிப்பி கலாச்சாரத்தில் திளைத்தனர். 

மேன்சனின் சீடர்கள் அவரது ஆணைப்படி 1969 ஜுலை மற்றும் ஆகஸ்டில் நான்கு இடங்களில் ஒன்பது கொலைகள் செய்தனர். 


ஆகஸ்ட் 9, 1969 அன்று, திரைப்பட இயக்குனர் ரோமன் போலன்ஸ்கியின் பெவர்லி ஹில்ஸ், கலிபோர்னியா வீட்டில் சார்லஸ் மேன்சனின் சீடர்கள் போலன்ஸ்கியின் கர்ப்பிணி மனைவி நடிகை ஷரோன் டேட் உட்பட ஐந்து பேரைக் கொன்றனர்.

கொலைகளுக்கு முன் வீட்டில் இருந்தவர்கள் "நீங்கள் யார்?"  என்று கேட்டதற்கு,  'நான்தான் சாத்தான். சாத்தானின் வேலையைச் செய்ய வந்திருக்கிறேன்.' என்று பதில் வந்தது.

ஷரோன் டேட்  பதினாறு முறை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டிருந்தார். அவருடன் இருந்த நான்கு நண்பர்களும் கொல்லப்பட்டனர். இரத்தக்களரியாக நிகழ்ந்த அந்தக் கொலைகள் நாட்டையே அதிர வைத்தது.

சார்லஸ் மேன்சனுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுப் பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.


இங்கே V அந்த நிகழ்வை மேற்கோள் காட்டி லில்லிமனின் முடிவை முன்னறிவிக்கிறான்.


இந்த கொலை வழக்குப் பற்றி விரிவாக அறிந்து கொள்ள charles monson the devil's work என சர்ச் செய்து பாருங்கள்.

மதன் எழுதிய 'மனிதனுக்குள் ஒரு மிருகம்' புத்தகத்திலும் சார்லஸ் மேன்சன் பற்றி எழுதப்பட்டுள்ளது.



இதை எதில் செய்திருந்தாலும் மீட்பரின் சரீரமாக மாறுமா?  

தேவாலயத்தின் பிரசங்கத்தின்போது நற்கருணையாக திராட்சை இரசத்தில் தோய்த்து அளிக்கப்படும் அப்பம் வயிற்றினுள் சென்றதும் இயேசுவின் உடலாக மாறுகிறது என்பது கிறிஸ்தவ நம்பிக்கை.


V கிறிஸ்தவ மதகுரு லில்லிமனுக்கு சயனைட் விஷம் தோய்ந்த அப்பத்தைக் கொடுக்கும் முன் (அது சயனைட் விஷத்தில் தோய்க்கப்பட்டிருப்பது லில்லிமனுக்குத் தெரியாது.)  'அந்த அப்பம் எதில் செய்யப்பட்டிருந்தாலும் உண்ட பின்  இயேசுவின் உடலாக மாறுமா?'  என கேட்கிறான்.

ஆம்!  என பதிலளிக்கிறார் லில்லிமன்.

அவருக்கு சயனைட் தோய்ந்த அப்பத்தை புகட்டுகிறான் V .




இந்த உரையாடலின் ஆடியோ பதிவை பின்னர் கேட்கும் ஃபின்ச் அந்த விஷ அப்பம் லில்லிமனின் வயிற்றுக்குள் சென்றபின் அவருடைய நம்பிக்கையின் படி இயேசுவின் உடலாக மாறாமல் கடைசி வரை விஷமாகவே இருந்து அவரை பலி கொண்ட முரண்நகையை சுட்டிக் காட்டுகிறார்.



லில்லிமன் இறந்த விதம் முரண்பாடாக பொருத்தமானது. V லில்லிமனுக்கு விஷம் கலந்த. அப்பம் ஒன்றைக் கொடுக்கிறான்.

 அப்பம் கிறிஸ்துவின் உடலாக மாறும் என்று கிறிஸ்தவம் கற்பித்தாலும், Vயின் விஷம் கலந்த  அப்பம்   லில்லிமனை மதப் பரவசத்தால் நிரப்புவதற்குப் பதிலாக அவரைக் கொன்றது.

மதகுரு அந்தோனி லில்லிமன் ஒரு பாசாங்குத்தனமான, மிகவும் ஊழல் நிறைந்த மதகுரு ஆவார், அவர் Vயிடம் நிகழ்த்தும் உரையாடல்களிலிருந்து அலரும் ஒரு காலத்தில் லார்க்ஹில் வதைமுகாமில் பணியாற்றியிருப்பதாக தெரிய வருகிறது. பின்னர் லில்லிமன் வெஸ்ட்மின்ஸ்டர் மதகுருவாக உயர்ந்தார், அங்கு அவர் ஒரு இனவெறி, இரத்தவெறி மனப்பான்மையைக் காட்டிக் கொடுக்கும் பிரசங்கங்களை வழங்கினார்.   

பைபிளின் வசனங்களை வாசித்து அப்பம் அளித்து V லில்லிமனுக்கு அவருடைய மதவழியிலேயே தீர்ப்பளித்திருக்கிறான்.


*******



ஷரோன் டேட்



சார்லஸ் மேன்சன்



பீத்தோவன்


********



தொடரும்...


Sunday, November 7, 2021

7, தர்மம் வெல்லும்

 



Please allow me to introduce myself.
I'm a man of wealth.
 and taste....


'டென்னிஸ்'  மதகுரு லில்லிமனின் உதவியாளர்.  அவர் மதகுருவின் சிறுமிகள் மீதான பாலியல் நடவடிக்கைகளுக்கு துணை செல்பவராக இருக்கிறார்.

மதகுரு அந்தோணி லில்லிமனின் சிறுமிகள் மீதான பாலியல் வக்கிரம் சாதாரண காவலாளிகள் கூட அறிந்த ஒன்றாகவே உள்ளது.

ஈவி Vக்கு உதவியாக செயல்படுகிறாள்.
Vயிடம் ஈவி ஹம்மான்ட் செய்து கொண்ட ஒப்பந்தம் எத்தகையது என்ற விபரம் அறிய தரப்படவில்லை.

V ஈவிக்கு லில்லிமனின் கபடத்தனம் பற்றியும் அங்கு அவள் எதிர்கொள்ளப் போகும் அபாயம் பற்றியும் விளக்கி இருந்தானா என்பது பற்றியும்  விளக்கங்கள் இல்லை.


தயவு செய்து என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள அனுமதியுங்கள்.
நான் ஒரு செல்வந்தன்.
இரசனையும் உள்ளவன்...

V லில்லிமனிடம் உச்சரிக்கும் இந்த வரிகள்  1968ல் வெளியான ரோலிங் ஸ்டோனின் 'பிசாசுக்கு அனுதாபம்' என்ற ராக் இசை ஆல்பத்தின் ஆரம்ப வரிகளாகும்.

இந்த ஆல்பத்துக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் 'என் பெயர் பிசாசு' என்பதாகும்.

பிசாசு தன்னைப்பற்றி விவரிப்பது போல் அமைந்த அந்தப் பாடலின் ஆரம்ப வரிகளை உச்சரித்துக் கொண்டு தலையில் சாத்தானின் கொம்புகளையும் அணிந்து கொண்டு V மதகுரு லில்லிமனின் முன் தோன்றும் போது,  லில்லிமன் பிசாசை எதிர்கொண்ட பீதியில் மிரண்டு போகிறான்.

பாடலில் பிசாசு தன்னை ஒரு புதிரானவன் என கூறிக்கொள்வது போன்று Vயும் ஒரு புதிரானவன்தான். Vயைப் புரிந்து கொள்வதும் எளிதல்ல...


வெளிநாடுகளில் உருவாக்கப்படும் கதைகளை முழுமையாகப் புரிந்து இரசித்து அனுபவிக்க கதைகளில் புகுத்தப்பட்டுள்ள அவர்களின் கலாச்சாரங்கள்,  பாடல்கள், இலக்கியங்கள் பற்றி அறிந்திருத்தல் வேண்டும்.

கதைகளில் எந்த இடமாவது புரியாவிட்டால் அது பற்றி நண்பர்களிடம் விவாதித்து தெளிவு பெற்று கதைளை முழுமையாக இரசிக்கலாம்.


பிசாசுக்கு அனுதாபம் என்ற இந்தப்பாடல் பற்றி முன்பே அறிந்தவர்களுக்கு V கொம்புகள் அணிந்து மதகுரு முன் தோன்றுவதில் உள்ள அபாரமான மிரட்டல் தன்மை பற்றி புரிந்து விடும்.

லில்லிமன் அப்பாடலையும் அதன் உட்பொருளையும் அறிந்தவன். கடவுளின் பெயரை உச்சரித்துக் கொண்டு சிறுமிகளை நாசம் செய்யும் அவனுக்கு  Vயின் தோற்றமும் அறிமுக வரிகளும் சாத்தானை சந்தித்து விட்ட திகிலைக் கொடுக்கிறது.

இப்பாடல் பற்றி அறியாதவர்கள் அந்தக் காட்சி சொல்ல வரும் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமலே கடந்து விடுவர்.


பிசாசுக்கான அனுதாபம் என்பது பிசாசை "புரிந்து கொள்ள" உங்களை அழைக்கும் ஒரு பாறை சம்பா. 

 இது 1978ல் எழுதப்பட்ட மிகவும் பிரபலமான ராக் பாடல்களில் ஒன்றாகும்.


பாடலில் பிசாசு தான் கதாநாயகனாக இருந்த மனித வரலாற்றின் அனைத்து துரதிர்ஷ்டங்களையும் விவரிக்கிறார், மேலும் தன்னைப் புரிந்துகொள்ள கேட்கிறார், இல்லையெனில் அவர் தன்னை மதிக்காதவர்களின் ஆன்மாவைக் கெடுப்பார். 

அவர் நூறு வருடப் போர், அக்டோபர் புரட்சி, இயேசுவின் விசாரணை, இரண்டாம் உலகப் போர் மற்றும் கென்னடிகளின் மரணம் ஆகியவற்றை மேற்கோள் காட்டுகிறார்.


பிசாசுக்கான அனுதாபம் மனிதகுலத்தின் இருண்ட பக்கத்தின் பகுப்பாய்வாக இருந்தது. 
தீமையின் சாதாரணத்தன்மையால் நம்மை மிக எளிதாக விழுங்க அனுமதிக்கும் ஒன்று, அதன் மூலம் அது விரும்பும் தீமையை நிறைவேற்ற உதவுகிறது. 
உங்களுக்குள் இருக்கும் பிசாசை நீங்கள் புரிந்து கொண்டால், ஒருவேளை நீங்கள் அவரை சமாளிக்கலாம்.




பிசாசுக்கு அனுதாபம் பாடலின் முழுமையான வரிகள்...

Sympathy for the devil

Please allow me to introduce myself
I'm a man of wealth and taste
I've been around for a long, long years
Stole million man's soul an faith

And I was 'round when Jesus Christ
Had his moment of doubt and pain
Made damn sure that Pilate
Washed his hands and sealed his fate

Pleased to meet you
Hope you guess my name
But what's puzzling you
Is the nature of my game

Stuck around St. Petersburg
When I saw it was a time for a change
Killed Tsar and his ministers
Anastasia screamed in vain

I rode a tank
Held a general's rank
When the blitzkrieg raged
And the bodies stank

Pleased to meet you
Hope you guess my name, oh yeah
Ah, what's puzzling you
Is the nature of my game, oh yeah

I watched with glee
While your kings and queens
Fought for ten decades
For the gods they made

I shouted out
Who killed the Kennedys?
When after all
It was you and me

Let me please introduce myself
I'm a man of wealth and taste
And I laid traps for troubadours
Who get killed before they reached Bombay

Pleased to meet you
Hope you guessed my name, oh yeah
But what's puzzling you
Is the nature of my game, oh yeah, get down, baby

Pleased to meet you
Hope you guessed my name, oh yeah
But what's confusing you
Is just the nature of my game

Just as every cop is a criminal
And all the sinners saints
As heads is tails
Just call me Lucifer
'Cause I'm in need of some restraint

So if you meet me
Have some courtesy
Have some sympathy, and some taste
Use all your well-learned politnesse
Or I'll lay your soul to waste, mm yeah

Pleased to meet you
Hope you guessed my name, mm yeah
But what's puzzling you
Is the nature of my game, mm mean it, get down

Woo, who
Oh yeah, get on down
Oh yeah
Aah yeah

Tell me baby, what's my name?
Tell me honey, can ya guess my name?
Tell me baby, what's my name?
I tell you one time, you're to blame

What's my name
Tell me, baby, what's my name?
Tell me, sweetie, what's my name?


தமிழில்: திரு பாலா கருப்பசாமி & M.சாக்ரடீஸ்

பிசாசுக்கு அனுதாபம்


தயவுசெய்து என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள அனுமதியுங்கள்
நான் செல்வமும் இரசனையும் நிறைந்தவன்
பல பல ஆண்டுகள் சுற்றிக் கொண்டிருக்கிறேன்
இலட்சக்கணக்கானோரின் ஆன்மாவையும் நம்பிக்கையையும் திருடினேன்

இயேசு கிறித்து சந்தேகமும் வேதனையும்
கொண்ட கணத்தில் நான் அங்கிருந்தேன்
பிலேத்து தன் கைகளைக் கழுவி அவர் 
விதியை முடிப்பதை உறுதிப்படுத்தினேன்

உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி
என் பெயரை ஊகிப்பீர்கள் என நம்புகிறேன்
ஆனால் உங்களைக் குழப்புவது
என் ஆட்டத்தின் இயல்பு

ஒரு மாற்றத்துக்கான நேரமென்று நான் கண்டுகொண்டபோது
செயிண்ட் பீட்டர்ஸ்பர்கைச் சுற்றி வந்தேன்
ஜார் மன்னரையும் அவரது அமைச்சர்களையும் கொன்றேன்
இளைய மகள் அனஸ்தேசியா வீணாகக் கதறினாள்

திடீர்த் தாக்குதல் எழுந்தபோதும்
உடல்கள் அழுகி நாறியபோதும்
ஒரு டாங்கியை ஓட்டினேன்
ஒரு படைத்தளபதியாய் இருந்தேன்

உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி
என் பெயரை ஊகிப்பீர்கள் என நம்புகிறேன், ஓ சரிதான்
ஆ, ஆனால் உங்களைக் குழப்புவது
என் ஆட்டத்தின் இயல்பு, ஓ சரிதான்

குதூகலத்தோடு பார்த்தேன்
உங்கள் அரசர்களும் அரசிகளும்
தாங்கள் உருவாக்கிய கடவுள்களுக்காக
நூறாண்டுகளாகச் சண்டையிட்டபோது

நான் கத்தினேன்
கென்னடிகளைக் கொன்றது யார்?
என்ன இருந்தாலும்
அது நீங்களும் நானும்தான்

தயவுசெய்து என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள அனுமதியுங்கள்
நான் செல்வமும் இரசனையும் நிறைந்தவன்

நான் துருப்புகளுக்கு பொறிகளை வைத்தேன்
பம்பாயை அடைவதற்குள் யார் கொல்லப்பட்டார்கள்

உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி
நீங்கள் என் பெயரை ஊகிப்பீர்கள் என்று நம்புகிறேன், 
ஆமாம் ஆனால் உங்களைக் குழப்புவது என் ஆட்டத்தின் இயல்பு
ஓ சரிதான், கீழே இறங்கு, குழந்தை

உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி
நீங்கள் என் பெயரை ஊகிப்பீர்கள் என்று நம்புகிறேன், ஓ சரிதான்
ஆனால் உங்களைக் குழப்புவது
என் ஆட்டத்தின் இயல்பு

ஒவ்வொரு காவலரும் குற்றவாளி என்பதுபோல
அனைத்து பாவிகளும் புனிதர்கள்
தலைகள் வால்கள் போல
என்னை லூசிபர் என்று அழையுங்கள்
ஏனென்றால் எனக்குக் கொஞ்சம் பணிவு தேவை

எனவே நீங்கள் என்னைச் சந்தித்தால்
கொஞ்சம் மரியாதை வேண்டும்; கொஞ்சம் அனுதாபம்; கொஞ்சம் இரசனை
உங்கள் அரசியல் அனைத்தையும் பயன்படுத்துங்கள்
அல்லது நான் உங்கள் ஆன்மாவை வீணாக்குவேன், ம்ம் சரிதான்

உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி
 நீங்கள் என் பெயரை ஊகிப்பீர்கள் என்று நம்புகிறேன், ம்ம் சரிதான்
ஆனால் உங்களைக் குழப்புவது என் ஆட்டத்தின் இயல்பு
அதாவது, ம்ம் கீழே இறங்கு

கேட்கிறேன், யார்
ஓ, கீழே இறங்கு
ஓ சரிதான்
ஆ சரிதான்

சொல் குழந்தாய், என் பெயர் என்ன?
சொல் அன்பே, என் பெயரை ஊகிக்க முடியுமா?
சொல் குழந்தாய், என் பெயர் என்ன?
நான் உங்களுக்கு ஒருமுறை சொல்கிறேன், நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள்

என்னுடைய பெயர் என்ன
சொல், குழந்தாய், என் பெயர் என்ன?
சொல்லேன் செல்லமே, என் பெயர் என்ன?

***********

இசை ஆல்பத்துக்கு YouTube ல்
Sympathy for the devil என சர்ச் செய்யுங்கள்.
 



தொடரும்...

Monday, October 18, 2021

6, பார்வை

...சத்தியத்தின் சக்தியால் இந்தப் பிரபஞ்சத்தை நான் வென்று விட்டேன்...

V for vendetta 







இந்த ஆறாம் அத்தியாயம் நோர்ஸ்ஃபயர் அரசு மக்களை மத உணர்வால் இணைப்பது பற்றியும், அரச அதிகாரிகள் சிலரின் குடும்பம் பற்றியும், மதகுரு 'அந்தோணி லில்லிமனின்'  கபடத்தனம் பற்றியுமான பார்வையை வழங்குகிறது.






ஈவி Vக்கு உதவ விரும்புகிறாள். அவள் தனக்கு உதவுவது கட்டாயமானதில்லை என உறுதிப்படுத்தும் V அவளுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள சம்மதிக்கிறான்.




ஐரோப்பிய கலாச்சாரத்தின் முக்கிய கதைகளில் ஒன்று V விவரிக்கும் 'ஜான் ஃபாஸ்ட் ஒப்பந்தம்'

ஜான் ஃபாஸ்ட் பிசாசுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார்: பிசாசு ஜான் ஃபாஸ்டுக்கு வரம்பற்ற சக்தியையும் அறிவையும் கொடுக்கும், அதற்குப் பதிலாக ஃபாஸ்ட் பிசாசுக்கு தனது ஆன்மாவைக் கொடுப்பார்.
ஃபாஸ்ட் கதை பற்றி மேலும் அறிந்து கொள்ள 🔎 John faust deal என கூகுளில் தேடிப் பாருங்கள்.


நோர்ஸ்ஃபயர் அரசு மக்களின் ஆதரவைப் பெற மத வெறியை பயன்படுத்துகிறது. அரசாங்கம் சார்பில் உள்ள மதகுரு அந்தோணி லில்லிமன்  மதத்தின் வழியாக ஆதிக்கச் சக்திக்கு இணங்க மக்களை வழிநடத்துகிறார்.
ஒரே இனம், ஒரே மதம் போன்ற பிரச்சாரத்தின் கீழ் மற்ற இனங்கள் மதங்கள்  வெறுத்து ஒதுக்கப்படும். 


'கண்' பிரிவின் தலைவர் கொன்ராட் ஹேயர் தன் மனைவி ஹெலனுக்கு அடங்கியவராகவும் பயப்படுபவராகவும் இருக்கிறார்.

இந்த கட்டங்களில் ஹேயரின் வீடியோ கண்காணிப்பு பணியை ஹெலன் கேலி பண்ணுகிறாள்.



விரல்களின் (ஃபிங்கர்) தலைவர் டெரக் அல்மோன்ட் தன் மனைவி ரோஸ்மேரியை அலட்சியப்படுத்துபவராகவும் அவமதிப்பவராகவும் உள்ளார். 

ஏழு பாவங்கள்:



🔎 Seven deadly sins

பைபிள் கூறுவதன்படி ஏழு பாவங்கள்:

1,தற்பெருமை
2,பேராசை
3,கோபம்
4,பொறாமை
5,காமம்
6,பெருந்தீனி
7, சோம்பல்


Vயிடம் தான் செய்து கொண்ட உதவும் ஒப்பந்தத்தின் காரணமாக தினமும் கன்னி வேட்டையாடும் மதகுரு லில்லிமன் முன்னாக கவரும் தோற்றம் கொண்டு வந்து நிற்கிறாள் ஈவி ஹம்மாண்ட்.

அவள் பலியாடா?
அல்லது தூண்டில் புழுவா? 





தங்கத்தில் எரியும் என் வில்லை என்னிடம் கொண்டு வா...


வில்லியம் பிளேக் எழுதிய 'ஜெருசலேம்' கவிதையின் சில வரிகள் ஆலன்மூரால்  Vயின் இங்கிலாந்து விடுதலைக்கான எண்ணவோட்டங்களாக பொருத்தமாக எடுத்தாளப்பட்டுள்ளன. 




1804ல் வில்லியம் பிளேக் எழுதிய 'ஜெருசலேம்'  ஒரு புகழ் பெற்ற கவிதை.

'ஜெருசலேம்' முழுமையான கவிதை:


பண்டைய காலத்தில் அந்த பாதங்கள் இங்கிலாந்தின்  பச்சை  மலைகளில்  நடந்ததா? 

இங்கிலாந்தின் இனிமையான மேய்ச்சல் நிலங்களில் கடவுளின் புனித ஆட்டுக்குட்டி காணப்பட்டதா? 

 மேகமூட்டமான எங்கள் மலைகளின் மேல் தெய்வீகம் பிரகாசித்ததா? 

இந்த இருண்ட சாத்தானிய ஆலைகளுக்கு மத்தியில் ஜெருசலேம் இங்கு கட்டப்பட்டதா? 

எரியும் தங்கத்தின் என் வில்லை என்னிடம் கொண்டு வா: 

ஆசையின் அம்புகளை என்னிடம் கொண்டு வா: 

என் ஈட்டியை என்னிடம் கொண்டு வா:

 மேகங்களே! 
என் நெருப்பு ரதத்தை என்னிடம் கொண்டு வா. 

இங்கிலாந்தின் பசுமையான இனிமையான நிலத்தில்

 ஜெருசலேமை உருவாக்கும் வரை 

நான் மன சண்டையை நிறுத்தமாட்டேன், 

என் வாள் என் கையில் தூங்காது.


*****


'ஜெருசலேம்'  கிறிஸ்தவர்களின் புனிதமான நகரம்.  

இயேசு கிறிஸ்துவின் சரித்திரத்தில்  குறிப்பிடப்படாத 10 வயது முதல் 30 வயது வரையான காலகட்டத்தில் இயேசு இங்கிலாந்துக்கு சென்றதாக ஒரு கருத்து உண்டு.

சாத்தானிய ஆலைகள் :

தொழிற்சாலைகளில் அயராது உழைக்கும் மக்களின் மீதும் குழந்தை தொழிலாளர்கள் மீதும்  வில்லியம் பிளேக் அனுதாபம் கொண்டிருந்தார். தொழிற்புரட்சி மக்களின் வாழ்க்கையை இயந்திரமயமாக்கி விட்டதாகக் கருதினார்.

இத்தகைய
 இங்கிலாந்துக்கு இயேசு வந்திருந்தாரா? 
 'ஜெருசலேம்'  (சொர்க்கம் போன்ற ஒரு சிறந்த இடத்துக்கான உருவகம். ) 
இந்த சாத்தானிய ஆலைகளுக்கு மத்தியிலும் கட்டப்பட்டதா? என வியப்பதாக பிளேக் எழுதுகிறார்.

எரியும் தங்கம்,  வில்,  அம்பு, ஈட்டி போன்றவை தொழிற்சாலைகளுக்கு எதிரானஅவரது உணர்வுகளைக் குறிக்கிறது.

நெருப்பு ரதம்: பைபிளில் சொர்க்கத்துக்கு நெருப்பு ரதத்தில் அழைத்துச் செல்லப்பட்ட எலியா தீர்க்கதரிசியின் கதை.

இங்கிலாந்தின் செழிப்பு மீட்கப்படும்வரை தான் ஓய்வதில்லை என பிளேக் கவிதையை முடிக்கிறார்.




வில்லியம் பிளேக்கின் ஜெருசலேம் கவிதை பற்றி மேலும் அறிந்து கொள்ள
🔎 William blake Jerusalem  poem என கூகுளில் தேடிப்பாருங்கள்.



போருக்குப் பின் அழிந்து போன வயலட் கார்சன் ரோஜா செடிகள் V யின் இருப்பிடத்தில் வளர்கின்றன.

V ஒரு ரோஜாவை எடுத்துச் செல்கிறான். அது மதகுரு அந்தோணி லில்லிமனுக்காக இருக்கலாம்.
 
V தன்னுடைய தாக்குதல்களில் அந்த ரோஜாவை விட்டுச்செல்வதன் காரணத்தை வருங்காலம் நமக்கு அறிவிக்கலாம்.

******

தொடரும்....


Thursday, October 14, 2021

5,கோணங்கள்

 

சுதந்திரமாக செயல்பட முடியாத நீதி அர்த்தமற்றது.

V for vendetta 



 🔎 old bailey lady justice 


இந்த ஐந்தாம் அத்தியாயம் தலைவர் சூசனும் Vயும் தனித்தனியே நிகழ்த்தும் சிந்தனைகளின் கோணங்களை வெளிப்படுத்துகிறது.

நீதிதேவதையின் முன்னே இரு பதிப்புகள். 
ஒரு பாசிசவாதியும், 
ஒரு புரட்சியாளனும்.

(கதையில் இடம்பெறும் இந்த நீதி தேவதையின் சிலை உண்மையாகவே இங்கிலாந்தில் உள்ளது.
Old Bailey lady justice என்று கூகுளில் தேடிப்பாருங்கள்.)





ஆடம் சூசுன் என்ற தலைவரின் பெயரையும் அவரது அரசியல் சித்தாந்தத்தையும் நாம் இந்த அத்தியாயத்தில் அறிந்து கொள்கிறோம்.
தலைவரின் சிந்தனைகள் ஹிட்லரின் வழிகளை ஒத்திருக்கிறது.




அவர் நடந்து வரும்போது உயர்த்தப்படும் கைகள் சர்வாதிகாரி ஹிட்லரை வரவேற்க  நாஜி சிப்பாய்கள் கைகளை உயர்த்தும் காட்சி நினைவுக்கு வருகிறது.



'விதி' கம்ப்யூட்டரின் மீது தலைவர் அளவற்ற பிரியம் வைத்துள்ளார்.
அதற்கு தான் ஒரு அடிமை என்ற கருத்தில் உள்ளார். 



V நீதி தேவதையுடன் ஒரு மனோரீதியான உரையாடலை நிகழ்த்துகிறான்.


தான் நேசித்த நீதிதேவதை 
தனது சுதந்திரமிழந்து சர்வாதிகாரத்துக்கும் அநீதிகளுக்கும் வளைந்து கொடுப்பதை எடுத்துரைக்கிறான்.




 தான் புரட்சியை வழியாகக் கொள்வதாகக் கூறி நீதித்தேவதைச் சிலையை தகர்த்துச் செல்கிறான்.



அத்தியாயம் ஐந்து துப்பறிவாளர் எரிக் ஃபின்ச்சுக்கு ஒரு தகவலுடன் முடிகிறது. 'அறை எண் 5'  ரோமன் எண்ணில்  V





தொடரும்...

*********


...அவள் பெயர் புரட்சி. சுதந்திரமில்லாமல் நீதிக்கு அர்த்தமில்லை என்று அவள் சொல்லித்தந்தாள்...