Saturday, March 12, 2022

ஒரு ஜலதோஷப்பறவை

 






ஒருநாள் பீவெர்களின் கிராமத்துக்கு இடைவிடாத. ஜலதோஷ தும்மல் பிரச்சனை கொண்ட பெலிகன்  ( Pelican )  ஒன்று வந்து சேர்கிறது.

அது  தங்குவதற்கு மர அணை தன் வீட்டில் இடமளிக்கிறார். வந்த விருந்தாளியோ அன்றைய இரவு தன் இடைவிடாத தும்மகளால் பீவெர் கிராமத்தையே தூங்க விடாமல் செய்து விடுகிறார்.




உறக்கம் தொலைத்த பீவெர் கிராமத்தினர் பெலிகனை வெளியேற சொல்கின்றனர். யகரி அந்த அந்நியப்பறவையை தன் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று கூடாரத்துக்குள் ஒளித்து வைக்கிறான்.

அங்கு பெலிகனின் தும்மல் சத்தத்தினால் கவரப்பட்டு வரும் வானவில்லிடம் தனக்கு ஜலதோஷம் பிடித்திருப்பதாக கூறி சமாளிக்கிறான். அவனுக்கு நீராவி குடிசையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆலோசனை கூறுகிறாள் வானவில். 

யகரிக்கு அது சிறந்த யோசனையாக தெரியவே , பெலிகனை அழைத்துக் கொண்டு மீண்டும் பீவெர்களின் கிராமத்துக்குச் செல்கிறான். 
ஆனால், மர அணை 'பட்டது போதும்' என்று தத்துவம் பேசி  உதவ மறுத்து விடுகிறார்.


பெலிகனை தன் மீது சுமந்தவாறு பயணிக்கும் இடிக்குட்டி அதன் தொடர் தும்மல் சப்தங்களால் செவித்திறன் பாதிக்கும் நிலையை அடைகிறது.
 
கை கொடுப்பான் தோழன் என்பதற்கேற்ப யகரிக்கு உதவ முன் வருகிறான் லிண்டென் மரம். அவனுடைய தோழகளின் உதவியோடு வியர்வைக் குடில் தயாராகிறது. 

நீராவி சிகிச்சையால்  பெலிகனின் ஜலதோஷம் நின்று விடுகிறது. ஆனால் அது மீன் பிடிக்க முயலும்போது ஆற்றில் இடறி விழுந்து மீண்டும் ஜலதோஷம் பிடித்துக் கொள்கிறது.

 லிண்டென் மரத்தின் யோசனைப்படி பெலிகனுடன் நீர்நாய்களின் வசிப்பிடத்துக்கு செல்கிறார்கள். நீர்நாய்கள் பெலிகனுக்கு நாள் முழுவதும் மீன் பிடித்து தருகின்றனர். பெலிகனின் தீராப்பசி அவர்களுக்கு தாங்கள் கொடுங்கரடியின் பிடியில் சிக்கியிருந்த காலத்தை நினைவூட்டுகிறது.
 
மாலை வரை மீன் பிடித்துக் கொடுத்து களைத்துப் போன நீர்நாய்களை  இரவில் பெலிகனின் தொடர் தும்மல்கள் தூங்கவும் விடவில்லை.




மறுநாளும் அதிகாலையே பெலிகனுக்கு மீன் பிடிக்கும் படலம் துவங்குகிறது. ஆனால் ஆற்றில் மீன்கள் காலியாகி விட்டிருந்தன. நொந்து போன நீர்நாய்களும் பெலிகனை வெளியேற சொல்லவே பெலிகனை அழைத்துக் கொண்டு கிளம்புகிறான் யகரி.




பெலிகனிடம் அன்றைய இரவை காட்டில் தனிமையில் கழிக்கச் சொல்லி விட்டு செல்லும் யகரி மறுநாள் திரும்பி வந்தபோது பெலிகனின் தும்மல் சத்தங்களால் உறக்கத்தை தொலைத்த காட்டுவாழ் பிராணிகளின் எதிர்ப்பை சந்திக்க நேரிடுகிறது.

அங்கிருந்து கிளம்பும் யகரி தான் முன்னர் கொடுங்கரடியிடமிருந்து காப்பாற்றிய ஸ்கின்னி கரடியிடம் உதவி கேட்க செல்கிறான்.  வழியில் ஏற்றமான  மலைப்பாதையில்  தும்மல் போட்ட பெலிகன் நிலைதடுமாறி  யகரி மீது விழ. இருவரும் உருண்டு மலை அடிவாரத்தை அடைகின்றனர்.




யகரிக்கு மேலும் தொல்லை அளிக்க விரும்பாத பெலிகன் யகரியிடம் தன்னை விட்டுச் செல்லும்படி     சொல்கிறது. இடிக்குட்டியும்அதை ஏற்றுக்கொள்ள யகரியிடம் கூறுகிறது. ஆனால் யகரி பெலிகனை கைவிட மறுக்கிறான்.

அப்போது அங்கு வந்த ஸ்கின்னி விவரங்களை கேட்டறிந்து பெலிகனை தூக்கிக் கொண்டு ஆற்றுப்பகுதிக்கு செல்ல, இடிக்குட்டி தன் பாரம் நீங்கியதில் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது.

ஸ்கின்னி பிடித்து தந்த மீன்களை திருப்தியாக சாப்பிட்ட பெலிகன் உறங்கச் செல்கிறது. அன்றைய இரவில் தும்மல் சத்தம் எழவில்லை , மாறாக பெலிகன் விட்ட பயங்கரமான குறட்டை சத்தத்தால் அந்த ஓய்விடம் நிரம்பியது.

காலையில் பெலிகனுக்கு ஜலதோஷம் விட்டிருந்தது.  உற்சாகத்துடன் பறந்த பெலிகன் முன்னர் தனக்கு உதவிய நீர்நாய்களுக்கு மீன்கள் பிடித்துக் கொடுத்து தன் நன்றியை தெரிவித்தது.

அடுத்து பீவர்கள் கிராமத்துக்கு  சென்று லிண்டென் மரத்தையும் அதன் தோழர்களையும் தன் அலகில் அமர்த்தி பறந்து பீவெர்களை மகிழ்வுற செய்தது. இரட்டைப்பல்லன் பெலிகனின் உருவத்தை மரங்களில் செதுக்கி மகிழ்ந்தான்.

இவ்வாறு எத்தனையோ எதிர்ப்புகளையும் சிரமங்களையும் சந்தித்த போதும், இடிக்குட்டி சலித்துக் கொண்ட போதும் பெலிகனே நம்பிக்கை இழந்த போதும் மனம் தளராமல் விடாமுயற்சியுடன் பரிதாபத்துக்குறிய பெலிகனுக்கு உதவி அதன் வாழ்வை மீட்டுக் கொடுத்தான் இரக்கமுள்ள நெஞ்சம் படைத்த வீரன் யகரி.

பெலிகன்  தன்  பயணத்தை தொடர தீர்மானிக்கிறது. ஆனால் பீவெர்கள் சில நாள் தங்கி இருக்கும்படி வற்புறுத்துகின்றனர். 
அதைப் பார்த்த இடிக்குட்டி
 நிலைமை தலைகீழாக மாறி விட்டதாக  கூறியது.

  அப்போது நிறைய பெலிகன்கள் பீவெர்களின் கிராமத்தை வந்தடைந்தன.
இரட்டைப்பல்லன் மரங்களில் செதுக்கிய பெலிகனின் நினைவுச் சின்னங்களைப் பார்த்து ஜலதோஷ பெலிகனை கண்டு பிடித்ததாக அவை தெரிவித்தன.




 தன் கூட்டத்துடன் செல்ல தீர்மானித்து யகரியிடமும் மற்ற தோழர்களிடமும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு உயர உயர மகிழ்ச்சியாகப் பறந்தது அந்த ஜலதோஷ... இல்லை, இல்லை, சந்தோஷப்பறவை!


மீண்டும் சந்திப்போம்...




***********




Pelican

கூழைக்கடா (Pelican) என்பது (பெலிக்கனிடே) கூழைக்கடாக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை. இப்பறவையை வேடந்தாங்கல் பகுதியில் மத்தாளி அல்லது மத்தாளிக் கொக்கு என்றும் அழைக்கின்றனர்.[1] கூழைக்கடாக்கள் பறக்கும் பறவைகளில் மிகப் பெரிய நீர்ப் பறவை. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மென்மையாகக் கூழ் போன்று இருப்பதாலும், கிடா போன்று பெரிதாக இருப்பதாலும் இதைக் கூழைக்கடா என அழைக்கிறார்கள். இதன் எடை 4.5 முதல் 11 கிலோகிராம் வரை இருக்கும். சிறகுகளின் நீளம் 2.7 மீ. மொத்த உயரம் 127 முதல் 182 செ.மீ. அலகு நீளம் 22 செ.மீ. கூழைக்கடாக்கள் நெடுந்தூரம் வலசை செல்லும் இயல்புடையவை. இவ்வினத்தின் எண்ணிக்கை மிதமான-துரித வீதத்தில் குறைந்து வருவதால் இதனை அச்சுறுத்துநிலையை எட்டியவை என்ற பிரிவில் ஐயுசிஎன் - சிவப்புப் பட்டியலில் வகுத்துள்ளது.





No comments:

Post a Comment