Friday, May 20, 2022

பழி வாங்கும் பச்சோந்தி!

 




பழிவாங்குதல் என்பது மிகவும் சக்தி வாய்ந்த நோக்கம். ஆனால் அந்த நோக்கத்தில் நீதி இருக்க வேண்டும்.
 
அநீதியும் வன்மமும் வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் பதியப்பட்டு நினைவுகூறப்படும்போதெல்லாம் கசப்பையும் அறுவெறுப்பையுமே பிறப்பிக்கும்...

திகில் 28, மர்ம முத்திரை கதையில் கமிஷனர் போர்டனால் சிறையில் அடைக்கப்பட்ட சமூகவிரோதி  'பச்சோந்தி என்ற புனைப்பெயர் கொண்ட பியரட் வால்கன்' சிறையில்  மாண்டு போகிறான்.  






அவனால் சிலகாலம் முன் தத்தெடுக்கப்பட்ட  'பிலிப்பி மானியர்'  என்ற இளைஞன் கமிஷனர் போர்டனை பழி வாங்கும் நோக்கத்துடன் காவல்துறையில் சேர்ந்து கமிஷனரை கடத்தி கொல்ல முயன்றதை வாசித்திருப்பீர்கள்.

அந்த சதிச்செயல் ஜானியால் முறியடிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் மானியர் சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்த R.I.P. Ric!  கதையில் அறுவை சிகிச்சை மூலம்  ஜானியைப்போல  தன் முகத்தோற்றத்தை மாற்றிக் கொண்டு இன்ஸ்பெக்டர் மானியர் மீண்டும் வருகிறான்.

ஜானியை தாக்கி  மறைத்து வைத்து விட்டு அவனது பாத்திரத்தை தான் எடுத்துக் கொள்கிறான்.

ஆனால் மானியர் தன்னுடைய புதிய அவதாரத்தில் ஜானியில் நண்பர்களை மட்டுமின்றி எதிரிகளையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
 தன்னுடைய பாதைகளின் தடைகளை அழிப்பதில் அவன் தயக்கமோ தாமதமோ காட்டுவதில்லை.


கமிஷனர் போர்டன் தன்னுடைய பணி ஓய்வு பெறும் இறுதி நாட்களில் பெடுலா எனும் (முன்னாள் சிறைப்பறவை) இளநங்கையை திருமணம் செய்து கொள்ளும் துடிப்பில் இருக்கிறார்.

நாடீன் கதாபாத்திரம் முந்தைய கதைகளை விடவும் சுதந்திரமாகவும் உல்லாச விரும்பியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஜானி என தான் நம்பும் நபருடன் இளமை விளையாட்டில் ஈடுபடும் அளவுக்கு....

மானியரின் திட்டப்படி கமிஷனர் போர்டன் பெடுலாவின் திருமண விருந்தில் பெடுலா கொல்லப்படுகிறாள். கமிஷனரை கொன்று விட்டு அந்நிகழ்வுகளுக்கான பழியை ஜானி மீது சுமத்தி விட்டு தான் மறைந்து விட மானியர் சம்பவங்களை நிகழ்த்தியபோதும் அவனது திட்டம் தோல்வியடைகிறது.
R.I.P. மானியர்! 



பெண்கள் எளிதில் திருப்தி அடைவதில்லை.


டிரஸ்ஸிங் ரூம் சுவற்றில் சைலன்ஸர் துப்பாக்கியை நுழைக்கும் அளவுக்கு துளை இருக்குமா? அல்லது துளை போடும் உபகரணத்துடன் வந்து துளை போட்டானா?


இன்னாம்மா நாடீன் கண்ணு,  ஜானி கூட நீச்சல் விளையாடனும்னா நீச்சல் உபகரணம் ரெண்டு வேணுமில்லையா?


கமிஷனர் போர்டனுக்கு இப்படி ஒரு அடியா???



ஒருத்தனை ஒழிச்சுக் கட்டுன பிறகு இப்படி கேட்குறீங்களே கமிஷனர்? 








என் உயிர்...
நீ என் உயிர்...

என் சந்தோஷம்...
என் ஒரே சந்தோஷம்...

ஓ... நான் தந்திரங்களை வெறுக்கிறேன்...
 வஞ்சனையையும் ஏமாற்றுதலையும்...

இல்லை, எனக்கு நேரமில்லை...
 அற்பத்தனத்துக்கும் தந்திரத்துக்கும்...

செலவில் கணக்கு தேவையில்லை...
 கொடுப்பதில் தவறுமில்லை...

வாழும் வரை நேசியுங்கள்...
வாழும்போதே நேசியுங்கள்...

என் உயிர்...
நீ என் உயிர்...

என் சந்தோஷம்...
 என் ஒரே சந்தோஷம்...







இங்கே 'கிளிக்'கவும்.

Claude Monet












No comments:

Post a Comment