...கடந்தகாலம் உன்னைத் துன்புறுத்தாது, நீ அனுமதித்தாலே தவிர...
V for vendetta
...கடந்தகாலம் உன்னைத் துன்புறுத்தாது, நீ அனுமதித்தாலே தவிர...
V for vendetta
இந்த அத்தியாயத்தில் நோர்ஸ்ஃபயர் அரசின் முக்கிய தலைவர்கள் சிலரை அறிமுகம் செய்து கொள்வோம்.
கிராஃபிக் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் வெறும் சித்திரங்களல்ல.
நேரில் பழகும் மனிதர்களைப்போல அவர்களை அவர்களுடைய குணாதிசயங்களோடு நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

'வி என்றால் வஞ்சம்' வெறும் விறுவிறுப்புக்காக வாசித்துக் கடந்து செல்லக்கூடிய சராசரிக் கதையல்ல, அதன் ஒவ்வொரு பக்கத்திலும் பல மறைமுகமான விஷயங்கள் புகுத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு கட்டத்தையும் கவனமாக வாசிக்கும்போது அவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.
வி என்றால் வஞ்சம் பற்றி நண்பர்களிடம் கேட்டு அறிந்து கொண்டவற்றையும், இணையத்தில் தேடித் தெரிந்து கொண்டவற்றையும், கதையை வாசித்துப் புரிந்து கொண்டவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
1980களில்
ஒரு அனு ஆயுதப் போருக்குப் பின்பான இலண்டனில் Norsefire எனும் பாசிசக்கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது.
அடக்குமுறை மிகுந்த அந்த ஆட்சியிலிருந்து இலண்டனை மீட்க V என்ற புதிரான மனிதன் வன்முறையுடன் கூடிய புரட்சியை முன்னெடுத்தான்.
விதியின் குரல் என்பது அரசாங்கத்தின் பிரச்சார அலைவரிசை ஆகும்.
அரசாங்கத்தின் துறைகள் :
கண், ( வீடியோ கண்காணிப்பு)
காது, ( தொலைபேசி ஒட்டுக்கேட்பு)
மூக்கு, (தடயவியல் துறை)
விரல்கள் (காவல் துறை)
என அழைக்கப்படுகிறது.
ஜோர்டான் டவர் எனும் கட்டிடம் வாய்ப்பகுதியாகக் குறிப்பிடப்படுகிறது.
இப்படியாக அரசாங்கம் ஒரு இராட்சச மனிதத்தோற்றம் கொண்டுள்ளது.
அதன் தலைமையாக 'விதி' என்னும் கம்ப்யூட்டர் உள்ளது.
'விதி' கம்ப்யூட்டரின் ஆணைகளை செயல்படுத்துபவர் 'தலைவர்'
'விதியின் குரல்' எனும் ரேடியோ அலைவரிசை மூலம் இந்த அரசமைப்பு தன் செய்திகளையும் அறிவிப்புகளையும் பிரச்சாரம் செய்கிறது.
V யின் திட்டம் இந்த இராட்சசக் கட்டமைப்பின் ஒவ்வொரு அங்கமாக முடக்கி அரசை வீழ்த்துவது.
வானிலையையும் மழை பொழியும் நேரத்தையும் துல்லியமாக அறிவிக்கும் அளவு அறிவியல் முன்னேற்றமடைந்த அந்த அரசில் இரவு ஒன்பது மணிவரை தொழிலாளிகள் வேலை செய்கின்றனர்.பிரச்சாரத்தில் அந்தப் பகுதிகள் தடை செய்யப்பட்டதன் காரணம் விளக்கப்படவில்லை. விளக்க வேண்டிய அளவுக்கு அரசு மக்களுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்றும் இதை எடுத்துக்கொள்ளலாம்.