Sunday, June 26, 2022

நதிக்கரை பூதம்!

 


பீவெர்களின் கிராமத்தில் பெரும்மழையால் அணைக்கட்டு சேதமடைகிறது. 

அணை சீரமைப்புப் பணியின்போது புதிரான முறையில் சில பீவெர்கள் காணாமல் போகின்றனர்.

இதற்கிடையே லிண்டென் மரம் சில நாட்களாக எதிலும் பிடிப்பற்றவனாக காணப்படுகிறான். அவனை உற்சாகப்படுத்த பெலிகன் தன்னுடன் பறக்க அழைத்துச்செல்கிறது, 

அப்போது அவர்கள் நதியில் பெரும்பாம்பு உருவத்தை கண்டனர். யகரி அதை ஆராயும்போது,  காணாமல் போன பீவெர்கள் லேலை செய்ய சோம்பற்பட்டு அதனுள் மறைந்துறைவதை கண்டனர்.


அப்போது பெரும்கழுகார்  யகரிக்கு நதிக்கரை பூதத்தின் கதையை விளக்கினார்.  வரலாற்றின் உண்மை நிகழ்வான ஒரு விசித்திரக்கதை அது...










உலகம் இளமையாக இருந்தபோது, ​​மக்கள் சிலர் இந்த பகுதியில் குடியேறினர், அங்கு அவர்கள் கிராமங்களைக் கட்டினார்கள்.

  அவர்களின் வாழ்க்கை நாடோடிகளாக இல்லை.  இறந்தவர்களின் வழிபாட்டு முறைக்கு அவர்கள் பெரும் முக்கியத்துவம் அளித்ததால், அவர்களின் கல்லறைகளை மண் மேடுகளால்* மூடி அவர்களை கௌரவித்தார்கள்.  

( * அல்லது துமுலி (ஒருமை: துமுலஸ்) அவர்களுடைய சரியான தொல்பொருள் பெயர். )


குலமரபுச்சின்னமாக விலங்குகளின் வடிவத்தில் அவர்கள் உருவாக்கிய அந்த மேடுகளில் சில: கரடிகள், முதலைகள் ... அவர்களின் மிகப்பெரிய வேலை சந்தேகத்திற்கு இடமின்றி பாம்புதான்.  *


( * ஆயிரக்கணக்கான புதைகுழிகள் (சிறிய மேடுகள், செயற்கை மலைகள் அல்லது துண்டிக்கப்பட்ட பிரமிடுகள்) மிசிசிப்பி படுகையில் அமைக்கப்பட்டன.  சின்சினாட்டிக்கு அருகில் உள்ள 'பெரிய பாம்பு மேடு' 1,348 அடி நீளம் (411 மீ) மற்றும் குறைந்தது 1,500 ஆண்டுகள் பழமையானது. )







இங்கே கிளிக்.

Saturday, June 18, 2022

சுதந்திரக்காற்று...

 

சியோக்ஸ் கிராமத்துப் பெரியவரான சாந்தமான பாறையிடம் எருமை வேட்டைக்கு குதிரைகளை பயன்படுத்தத் துவங்கியது பற்றிய பழங்கதைகளை கேட்டறியும் யகரி இடிக்குட்டியிடம் அந்தக்கதைகளின் கருத்தைப் பரிசோதிக்க முயலுகிறான்.



நல்ல உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்ட இடிக்குட்டி, யகரி தன்னை கிண்டல் செய்வதாக எண்ணி கோபடைகிறது. மேலும் யகரி ஒரு யஜமானைப்போல் இடிக்குட்டிக்கு உத்தரவிட ஆரம்பிக்கவே இடிக்குட்டி தனது சுதந்திரத்தைத் தேடி யகரியைப் பிரிந்து செல்கிறது .

இடிக்குட்டியை பிரிந்த யகரி அதை தேடி அலைகிறான்.  ஆனால் எங்கு தேடியும் இடிக்குட்டி கண்ணில்படவில்லை.





சோர்ந்துபோன யகரி இறுதியில் தனது காவல் தெய்வமான பெரும்கழுகாரிடம் சரணடைகிறான்.

இடிக்குட்டியும் யகரியும் நண்பர்களானபோது நடந்ததை நினைவூட்டும் பெரும்கழுகார்,  யகரி இடிக்குட்டியின் சுந்திரத்தை மதிக்கத் தவறிவிட்டதை சுட்டிக்காட்டுகிறார்.  மேலும் "ஆணவம் சர்வாதிகாரத்தின் விதை" என்றும் கூறுகிறார்.





தன்னுடைய தவறை உணரும் யகரி புது உற்சாகத்துடன் இடிக்குட்டியை தேடிக்கண்டு பிடித்து அதனிடம் தன்னுடைய செயலுக்கு மன்னிப்புக் கோருகிறான். இடிக்குட்டி அவனை மன்னித்து மீண்டும் தன்னுடைய நண்பனாக ஏற்றுக்கொண்டது.

அவர்களுடைய சாகஸ வாழ்க்கை புதிய துவக்கம் பெற்றது.


மற்றவர்களுடைய உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பதை இக்கதை வலியுறுத்துகிறது.

********



Sunday, June 12, 2022

1,மீண்டும் மரணம் வேண்டும்!



அமானுஷ்ய நிகழ்வுகளின் ஆராய்ச்சியாளர் டைலன்டாக்கிடம்,  இறந்து போன தன்னுடைய கணவரை தான் மீண்டும் கொன்றதாக விநோதமான வழக்கு ஒன்றை கொண்டு வருகிறார் ஒரு இளம்பெண்.

டைலனின் சந்தேகம் அப்பெண்ணின் கணவருடன் பணிபுரிந்த  மருத்துவர் ஷாபராஸ்  மீது திரும்புகிறது.

டைலன் டாக்கின் பரம வைரியான ஷாபராஸ் ( அப்ராக்ஷாஸ்) இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மருந்தை கண்டு பிடிக்கிறான்.

ஆனால் உயிர்பெற்றவர்கள் வெறும் நடைபிணங்களாக மாறுகின்றனர்.


டைலன்டாக் ஷாபராஸின் இருப்பிடத்தை அழித்து நடைபிணங்களை அமைதி கொள்ள செய்கிறார்.















Thursday, June 9, 2022

பாலைவனத்தின் "மன்னா"

 


எகிப்தியரின் அடிமைத்தளையிலிருந்து இஸ்ரவேலரை மீட்டு வழி நடத்தியபோது, பாலைவனத்தில் இஸ்ரவேல் மக்களின் பசியை தீர்க்க கடவுள் தினமும் "மன்னா" எனும் உணவை மழையாக  பொழிந்தார்.
#யாத்திராகமம்


இஸ்ரவேலருக்கு பாலைவனத்தில் பொழிந்த மன்னா போல,  செவ்விந்தியருக்கு  எண்ணற்ற எருமை மந்தையை அவர்களின் தெய்வமான வாகோண்டா கொடுத்தார்.




எருமைகளின் வாழ்முறையை நேரில் காண செல்லும் யகரி ஒரு எருமைக்குட்டியையும் அதன் தாயையும் ஓநாய்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுகிறான்.

ஓநாயின் வாலில் யகரி தீ வைக்கும் இடமும், பாதையை மறிக்கும் ஓநாய்களை  இடிக்குட்டி தாண்டி சாகஸம் பண்ணும் இடமும், இறுதியில் ஓநாய்க்கு இடிக்குட்டி உதை விட்டு பறக்க வைக்கும் இடமும் விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் நிறைந்தவை.

எருமைகள் சேற்றில் புரள்வது கொசுக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக என்பது புதிய தகவல்.





மந்தை ஒரு பரந்த நதியைப் போல நகர்ந்தது, தொடர்ந்து சிறிய நீரோடைகளால் இணைக்கப்பட்டது.  



******

Tuesday, June 7, 2022

இரண்டாவது பூமி!

 


இரு நிலவுகள் கொண்டதும் பூமியைப் போன்றதுமான அல்டபெரானில் மனிதகுலம் குடியேறிய பின் பூமியுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு கடந்திருந்தது.

சிறு கிராமமான அரேனா பிளாங்காவில் பேரழிவின் அறிகுறிகள் தென்படத் துவங்கின.

ஆழ்கடலிலிருந்து வந்த இனம்புரியாத அபாயத்தால் கிராமம் அழிந்து போக,  மிஞ்சியவர்கள் மார்க், நெல்லி,  கிம் ஆகிய மூவர் மட்டுமே.


தலைநகரான அனடோலியாவை நோக்கி
டிரிஸ் எனும் புதிரான அந்நியனின் உதவியுடன் அவர்கள் பயணத்தை துவக்கினர்.

நெல்லி டிரிஸ்ஸுடன் அல்வாராடோ செல்லத் தீர்மானிக்கிறாள். மார்க்கும் கிம்மும் அவர்களைப் பிரிந்து அனடோலியா செல்வதற்காக போர்ட் சைமன் நோக்கி செல்கிறார்கள்.

போர்ட் சைமனில் லூமிஸ் எனும் பாதிரியார் மார்க்கிடம் அரேனா பிளாங்கா கிராமத்தின் அழிவு பற்றி விசாரித்து குறிப்புகள் எடுத்துக்கொள்கிறார். 

 பாட் எனும் கிழவனின் வஞ்சகத்தால் மார்க்கும் கிம்மும் அராமிஸ் எனும் கப்பலின் கேப்டனுக்கு 100 டாலர்கள் கடன் பட்டவர்களாக பயணத்தை துவக்கினர், அனடோலியாவை நோக்கி...








நூறாண்டுகள் கழிந்த. எதிர்கால வேற்று  உலகிலும் சாமானியர்களின் வாழ்க்கை பெரிதாக மாற்றம் பெறாததாகவே உள்ளது.  



காலவரிசை 

ஜனவரி 2047 பூமியை ஒத்த முதல் கோள் ஆளில்லா விண்வெளி ஆய்வு " கலிலியோ கலிலி " மூலம் கண்டுபிடிக்கப்பட்டது . இது அல்டெபரான்-4 , டாரஸ் விண்மீன் மண்டலத்தில் உள்ள அல்டெபரான் நட்சத்திரத்தை சுற்றிக்கொண்டு 64 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது .  10 ஆண்டுகளுக்கு முன்பு செய்த நுட்பங்களைப் பயன்படுத்தி, ஒளியின் வேகத்தை முறியடிக்கும் வகையில், இத்தகைய பயணம் சாத்தியமாகியது.



செப்டம்பர் 2055 ஆல்டெபரான் - 4 இல் முதல் ஆட்களைக் கொண்ட விண் கப்பலின் வருகை, 
இது மிகவும் எளிமையாக அல்டெபரான் என்று பெயரிடப்பட்டது.  பூமிக்கு ஏறக்குறைய ஒரே மாதிரியான வளிமண்டலம், இனிமையான காலநிலை மற்றும் பூமியில் உள்ளதை விட குறைவான விரோதமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவற்றை இந்த கிரகம் கொண்டுள்ளது என்பதை இந்தப் பணி உறுதிப்படுத்தியது.

செப்டம்பர் 2061 ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அல்டெபரனில் குடியேற்றுவதற்கான செயல்முறையைத் தொடங்க முடிவு செய்தது.  ஒரு விண்கலத்தின் கட்டுமானம்  தொடங்கியது.


ஜூன் 2078 "ஜோஹன்னஸ் கெப்லர்" விண்கலம் 1500 குடியேறிகளுடன் அல்டெபரனுக்கு புறப்பட்டது.

11 பிப்ரவரி 2079 அன்று அல்டெபரான்  வருகை, சூரிய குடும்பத்திற்கு வெளியே முதல் மனித காலனி நிறுவப்பட்ட வரலாற்று நாள்.  பேஸ் 1 என்ற இடத்தில் " தரையிறக்கம் " நடந்தது , காலனியின் தலைநகராக இது மாறியது , குடியேறியவர்களின் முதல் ஜனாதிபதியான அனடோல் லெம்டெரிக்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் "அனடோலியா" என்று அழைக்கப்பட்டது.

மார்ச் 2079 " ஜோஹன்னஸ் கெப்லர் " விண்கலம் 14 பணியாளர்களுடன் பூமிக்கு திரும்பும் வழியில் ஒரு தடயமும் இல்லாமல் காணாமல் போனது .


ஏப்ரல் 2084 
2500 குடியேறிகள் மற்றும் 25 பணியாளர்களுடன் "டைக்கோ பிராஹே" என்ற விண்கலம் அல்டெபரான் செல்லும் வழியில் காணாமல் போனது.  ஒளியின் வேகத்தை உடைக்க அனுமதிக்கும் மிகவும் சிக்கலான இயற்பியல் நிகழ்வான " Benevides Transfer " இல் ஒரு தவறு என்று கூறப்பட்ட காரணம் .  கோட்பாட்டாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை அனைத்து டிரான்ஸ்லைட் விமானங்களும் நிறுத்தப்பட்டன .


Aldebaran இல், பூமியுடனான தொடர்பை உறுதிசெய்த தகவல் தொடர்பு செயற்கைக்கோள் உடைந்து  ஒளிபரப்பை நிறுத்தியது.  காலனி எந்த ஆதரவுமின்றி முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டது.  முதல் விபத்தைத் தொடர்ந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன, பூமியில், விஞ்ஞானிகளால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை, இன்னும் சில டிரான்ஸ்லைட் விமானங்கள் தவறாகச் சென்று விண்வெளியில் காணாமல் போனது ஏன் என்று இன்னும் புரியவில்லை.


நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அல்டெபரனுக்கு புதிய விண்கலங்கள் எதுவும் வரவில்லை மற்றும் பூமியுடனான வானொலி தொடர்பு மீண்டும் நிறுவப்படவில்லை.






Tuesday, May 31, 2022

கண்ணாமூச்சி ரே...ரே...


பல நுழைவாயில்கள் கொண்ட புல்வெளிநாய்களின் கைவிடப்பட்ட வளை ஒன்றை கண்டு பிடிக்கும் லிண்டன் மரம், கறுப்பு முகமூடி, இரட்டைக் கரடிக்குட்டிகளான ஹக்கிள் மற்றும் பெர்ரி ஆகியோர் அதன் மூலம் யகரியிடம் குறும்பு செய்து மகிழ்கின்றனர்.

பின்னர் மேலூம் வேடிக்கையான குறும்புளை ஹக்கிள் பெர்ரியின் பெற்றோரான பேராசைத் தேனியிடமும்  தேன் நிலவிடமும் நிகழ்த்தும்போது எதிர்பாராத விதமாக வளையின் மேற்பகுதி இடிந்து விழுந்து நுழைவாயில்கள் மூடிக்கொள்கின்றன. 
பெர்ரியும் கறுப்பு முகமூடியும் வளைக்குள் மாட்டிக்கொள்கின்றனர். 

யகரி புல்வெளிநாய்களை உதவிக்கு அழைத்து வந்து இருவரையும் மீட்கிறான்.

கதையின் முதல்பகுதி  நகைச்சுவையாகவும் இறுதிப்பகுதி பதைபதைப்பாகவும் நகர்கிறது.


குறும்பான விளையாட்டுகள் ஆபத்தில் முடியக்கூடும் என்பதை அந்த சிறிய பிள்ளைகள் இப்போது புரிந்துகொண்டிருக்கலாம்.  
என்னைப் பொறுத்தவரை , எல்லாம் நன்றாகவே முடிந்தது நான் இனி நிம்மதியாக உறங்கப் போகிறேன் !





Prairie dog


தரை நாய் (Prairie dog) என்பது வட அமெரிக்காவில் கனடா மற்றும் மெக்சிகோ பகுதியில் பிரெய்ரி என்ற நெடும் பரப்புப் புல்வெளியில் வாழும் எலி வகையைச் சேர்ந்த விலங்கினம் ஆகும். இதனை பிரெய்ரி நாய் என்றும் அழைப்பர். இதற்கு நாய் எனப் பெயர் இருப்பினும் இது நாய் இனத்திலிருந்து உருவத்திலும் வாழ்க்கை முறையிலும் முற்றிலும் வேறுபட்டது.


மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் பண்ணவும் புல்வெளி நாய்கள்







*****


Monday, May 30, 2022

மஞ்சள் சட்டை மன்மதன்!

 



உயிரோடு பிடித்துக் கொடுத்தால் ஐயாயிரம் டாலர்கள் வெகுமதி என்ற அறிவிப்புடன் லக்கிலூக்கின் சுவரொட்டிகள் பரவுகின்றன.

சுதந்திர நகருக்கு புதுவாழ்க்கை தேடிச் செல்லும் ஆஞ்சி, போனி, செர்ரி என்ற மூன்று பெண்களுக்கு பயணத் துணைவனாக லக்கிலூக் உதவுகிறார். அந்நகரமோ பாழடைந்த நிலையில் சமூக விரோதிகளின் ஆக்ரமிப்பில் உள்ளது.

வெகுமதி வேட்டையன்
செவ்விந்தியர்
சமூகவிரோதிகள் 
இராணுவம் என பலரும்  துரத்த ஏராளமான நிகழ்வுகளுக்குப் பின்  அந்த சுவரொட்டி மோசடியான ஏற்பாடு என தெரியவந்து லக்கிலூக் விடுவிக்கப்படுகிறார்.


அப்போது சுதந்திர நகரின் வழியாக விரைவில் இரயில்பாதை வருவதும் அங்கே ஒரு இரயில் நிலையம் அமைய இருப்பதும்  தெரியவருகிறது. இனி அந்நகரமும் அப்பெண்களின் வாழ்வும் புத்துயிர் பெறும்.




லக்கிலூக் மீது காதல் கொள்ளும் செர்ரி லக்கிக்கு நேசிக்கப்படுவதன் மூலம் நேசிப்பதன் சுவையை கற்றுத்தர முன் வருகிறாள், ஆனால் குடும்பம் என்ற ஒன்றில் பிணைக்கப்படுவதை விரும்பாத அந்த மஞ்சள் சட்டை மன்மதன் வழமை போல பெண்களின் மனதில் ஆறாத இரணத்தை ஏற்படுத்திச் செல்பவனாகவே இருக்கிறான்.



நான் ஒரு தன்னந்தனி குதிரைவீரன்...
தனிமை எனக்குத் தொல்லையில்லை....
பெண்கள் மீது வெறுப்பில்லை...
விடைபெற்றுக்கொள்வேன்,
பிணைத்துக்கொள்ள விரும்பவில்லை...
துணையாக ஒரு குதிரையுண்டு,
எங்கள் பயணம் முடிவதில்லை....

வாயை மூடு!
உன் நிழலை விட வேகமாக நீ சுடும்போது அது சண்டையில்லை, மரணதண்டனை. 


நிறுத்தி விட்ட புகைப்பழக்கத்தை தூண்டுகிறதே! 

*****

Friday, May 27, 2022

வெற்றி பெற விரும்பு!

 


யகரியின் உற்ற தோழனான இடிக்குட்டி குதிரைகளின் பெரும் ஆவியின் அழைப்பின்படி தன்னுடைய திறமைகளின் எல்லைகளை விரித்துக் கொள்ள யகரியை பிரிந்து பயணமாகிறது.

இடிக்குட்டியை  தேடியலையும் யகரி எவ்வளவு முயன்றும் தன் முயற்சியில் வென்றானில்லை. சோகத்துடன் தன் குடியிருப்புக்குத் திரும்புகிறான்.
அவனுடைய சாகஸங்கள் நிறைந்த  வாழ்க்கையில் அவனுக்கு கிடைத்த முதல் தோல்வி அது.

இடிக்குட்டி, காட்டாற்று வெள்ளம்,  பனிமலை, புதிர்ப்பாதை, நெருப்பு ஆகிய வாழ்வா சாவா போராட்டங்களில் தான் யகரியை மீண்டும் சந்திப்போமா என்பதே கேள்விக்குறியான தருணங்களிலும், வெற்றி ஒன்றே குறிக்கோளாக உயிரைப் பணயம் வைத்து வென்று யகரியிடம் திரும்புகிறது.

இடிக்குட்டியிடம் யகரி கேட்டான்: 
என்னிடம் ஏன் சொல்லிவிட்டுச் செல்லவில்லை?

இடிக்குட்டி சொன்னது: 
அது ஒரு இரகசியம் யகரி!

ஆம்! அது இடிக்குட்டியின் இரகசியம்...








காதல் கொல்ல வந்தேன்...

 


1, The heisei holmes

இருண்ட குகைப்பகுதியில் ஓடும் ரோலர் ஹோஸ்டரில் தலை துண்டிக்கப்பட்டு ஒரு கொலை நடக்கிறது. முதலில் ஈரமான நீர்த்துளிகளும் பின்னர் சூடான குறுதித்துளிகளும் கொனானின் முகத்தில் தெரிக்கின்றன. 

கத்தி ஒன்றும் கண்டு பிடிக்கப்படுகிறது, ஆனால் அக்கொலை கத்தியால் நிகழ்த்தப்பட்டதல்ல.



தன்னுடைய திறமையால் கொலை நடந்த விதத்தையும் கொலையாளியையும் கண்டு பிடிக்கிறார் கொனான்.



******



Thursday, May 26, 2022

வானவில்லை காணவில்லை...



சியோக்ஸ் கிராமத்தின் ஓரிரவுக் கூட்டத்தில் ஊர் சுற்றிப் பெரியவர் தான் பனிமலைக்கு சென்று வந்ததையும் அங்கு அனைத்தும் வெண்மையாக இருந்ததையும் வெள்ளைக் கரடிகளை கண்டு வந்ததையும் விவரிக்கிறார்.

அதைக் கேட்கும் வானவில் தானும் வெள்ளைக்கரடிகளை காணும் ஆவலில் மந்திரக்காலணிகளின் உதவியுடன் பனிநிலத்தை தேடிச் செல்கிறாள்.

அவளது குலதெய்வமும் பாதுகாவலருமான பெரும் முயலார் நானாபோஸாவும் யகரியும் அவளை தேடி புறப்பட்டனர். 

வானவில்லின் சுவடுகளை தொடர்ந்தும் மந்தி அம்பின் வழிகாட்டுதலிலும் கடுமையாக பயணம் செய்து அவர்கள் வானவில்லிடம் சென்றடைந்தனர்.

அவர்களை மந்திரப்படகு ஒன்று பனிநிலத்திற்கு பறந்து சேர்த்தது. அங்கே அவர்கள் வெள்ளைக்கரடிகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.




இதுவரை நான் வாசித்த யகரியின் கதைகளில் இயற்கை அபாயங்கள், காட்டு விலங்குகளின் வாழ்க்கை முறைகள் போன்ற கதை சொல்லலிருந்து இக்கதை மாறுபட்டு மாயாஜாலம் அதிகம் உள்ளது. இறுதியில் அனைத்தும் கனவுதான் என்றே கதையும் முடிகிறது.




 
Nanabhzo

அனிஷினாபே ஆதிசூகானில் (பாரம்பரிய கதைசொல்லல்), குறிப்பாக ஓஜிப்வேயில், நானாபுஷ் என்றும் அழைக்கப்படும் நானாபோஜோ ([nɐˌnɐbʊˈʒʊ]), ஒரு ஆவியாகும், மேலும் உலக உருவாக்கத்தின் கதை உட்பட அவர்களின் கதைசொல்லலில் முக்கிய இடம் வகிக்கிறது.  நானாபோஜோ ஓஜிப்வே தந்திர உருவம் மற்றும் கலாச்சார நாயகன் (இந்த இரண்டு தொல்பொருள்களும் பெரும்பாலும் முதல் நாடுகளின் புராணங்களில், மற்றவற்றுடன் ஒரே உருவமாக இணைக்கப்படுகின்றன).

நானாபுஷ் என்றும் அழைக்கப்படும் நானாபோசோ, பல ஃபர்ஸ்ட் நேஷன் கதை சொல்லல்களில் ஒரு தந்திரமான நபர்.  கதைசொல்லல் மூலம் நானாபுஷைப் பயன்படுத்துவது பொழுதுபோக்காக இருந்தாலும், தகவல் மற்றும் பொதுவான வாழ்க்கைப் பாடங்களைக் கடத்துவதற்கான ஒரு வழியாக இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.  நானாபோஜோ கதை சொல்லலில் ஆண் அல்லது பெண் விலங்குகள் அல்லது மனிதர்களின் வடிவத்தை எடுக்க முடியும்.  மிகவும் பொதுவாக அவை பழங்குடியினருக்கு அருகில் வாழும் காக்கை அல்லது சிறுநரி போன்ற விலங்குகள். அவை பிடிப்பதை கடினமாக்கும் அளவுக்கு தந்திரமானவை




Word: kayak

Tamil Meaning: எஸ்கிமோக்களால் பயன்படுத்தப்படும் பனிப் படகு.

 



இங்கே க்ளிக்! 

பனிக்கரடி





*******