Monday, September 9, 2024

Monster 42














 Waltzing Matilda 

Monster கதையோட்டத்தில் இந்த அத்தியாயம் சற்று மாறுபட்டது. Waltzing Matilda பாடல் சொல்லும் கதை தெரிந்திருந்தால்
இந்த அத்தியாயத்தில் உள்ள நகைச்சுவையை புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.

19ம் நூற்றாண்டில்  பண்ணையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒரு பண்ணையில் வேலை இழக்கும்போது, வேலை தேடி மற்றொரு பண்ணைக்கு கால்நடையாக பயணிப்பது வழக்கம்.

அப்படி ஒரு பண்ணைத் தொழிலாளி, தனது பயணத்தின்போது ஒரு ஆட்டை பிடித்து சாப்பிட்டு விடுகிறான். ஆட்டின் உரிமையாளரும் போலீசாரும் அவனை பிடித்தபோது, அவன் அருகில் இருந்த நீர்நிலையில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறான். அதன்பிறகு அவனுடைய ஆவி அப்பகுதியை சுற்றி வருகிறது. என்ற கதையை இந்தப் பாடல் விவரிக்கிறது. 

இந்தப்பாடலை பாடி இக்கதையை அறிந்து கொள்ளும் டெர்ரி,  இருளில் ஆவி உலவும் என்ற பயத்துடன் இருக்கிறான். 

அதே பகுதியில்  மனதில் தைரியத்தை வளர்த்துக் கொள்ள விரும்பும் ஒரு இளைஞன் சில மாதங்களாக தங்கி இருக்கிறான்.

அவனுடைய முயற்சி வெற்றியடையப் போகும் நாளுக்கு முந்தைய நாளில் மந்திர சின்னங்களை உடல் முழுவதும் வரைந்து அவன் தனிமையில் இருக்கும்போது, அங்கே ஆடுகளை தேடி வரும் டெர்ரி அவனை சந்திக்க நேரிடுகிறது.

அந்த இளைஞன், டெர்ரியை ஆட்டை தேடும் பண்ணை தொழிலாளியின் ஆவி என நினைத்து பயப்பட...

தன் உடலிலும் முகத்திலும் விநோத சின்னங்களை வரைந்திருக்கும் அந்த இளைஞனை, பண்ணை தொழிலாளியின் ஆவி என நினைத்து டெர்ரி திகிலடைய. ..

இருவரும் பீதியில்  ஓடுகின்றனர்.

அந்த இளைஞன் அடுத்த ஆண்டு மீண்டும் தன் மனதில் தைரியத்தை வளர்த்துக் கொள்ள  முயற்சிக்கலாம்.



பண்ணை தொழிலாளி


பாடல் விவரிக்கும் சூழல்


தமிழாக்கம்: M.சாக்ரடீஸ்

தொகுப்பு&வசனங்கள்: M.ராஜ்குமார்

No comments:

Post a Comment