Thursday, February 24, 2022

மலைவனத்தின் கொடுங்கரடி

 








ஒருநாள் இரவு மர அணையும் கறுப்பு முகமூடியும் 
( கரடி போன்ற தோற்றமூடைய Raccoon எனும் சிறு விலங்கினம்.) 
யகரியை காண வருகின்றனர். கறுப்பு முகமூடியின் பெற்றோர் காணாமல் போய்விட்டனர் என்றும்,  அவர்களை தேடிப்போன ஆயிரம் வாயனும் திரும்பி வரவில்லை என்றும் தெரிவித்து மலைப்பகுதியில் அவர்களை தேட யகரியின் உதவியை கேட்கின்றனர்.

'ஆபத்துக் காலத்தில் நண்பனை நாடு'  எனும் முதுமொழிக்கேற்ப தன்னை தேடி வந்திருக்கும் அவர்களுக்கு உதவுவதாக யகரி வாக்களிக்கிறான்.





மறுநாள் இடிக்குட்டியுடன் மலைப்பகுதியில் தேடலை துவக்கும் யகரி  ஒரு ஓநாய்க் குடும்பத்தை சந்திக்கிறான். 
யகரியிடமிருந்து விவரங்களை கேட்டறியும் தாய் ஓநாய் தன் குட்டிகளிடம் 'நாம் இன்னும் கவனத்துடன் இருக்க வேண்டும்.' என்று எச்சரிக்கிறது.

இடிக்குட்டியும் 'குகைக்கு வெளியே சுற்றித் திரிய வேண்டாம்.' என்று ஓநாய்க் குட்டிகளுக்கு அறிவுரை கூறியது.

பின்னர் யகரியும் இடிக்குட்டியும் ஒரு நீர்நாயை (Otter) சந்திக்கிறார்கள்.

 அந்த நீர்நாய் தன் தோழன் காணாமல் போய் விட்டதாக கூறி வருந்துகிறது. 
 
 நீர்நாய்க்கு ஏற்கனவே காணாமல் போவர்களைப் பற்றி விளக்கும் யகரி அதன் துணையையும் தேடுவதாக வாக்களித்து அதை பீவெர்களின் கிராமத்தில் பாதுகாப்பாக இருக்கும்படி கூறி அனுப்பி வைக்கிறான்.

அன்றைய தேடலில் அவர்களுக்கு தடயம் எதுவும் கிடைக்கவில்லை. இரவில் அவர்கள் உறங்கும் போது  தொலைவிலிருந்து பயங்கரமான அலறல் சத்தம் கேட்கிறது. 

 

அவர்கள் அது என்ன சத்தம் என்று புரியாமல் திகைக்கும் போது , அருகில் இருந்த ஒரு ஆந்தை, அந்த சத்தம் சிறிது காலமாகவே கேட்பதாகவும்,  மலை உச்சியில் விசித்திரமா சம்பவங்கள் நடப்பதால் அங்கு செல்ல வேண்டாம்,  என்றும் எச்சரிக்கிறது. 

நண்பர்களை மீட்க எந்த ஆபத்தையும் எதிர் கொள்ளத் துணியும் யகரி
 மறுநாள் மலை உச்சிக்கு செல்ல வேண்டும் என்ற தீர்மானத்துடன் உறங்க செல்கிறான்.




காலையில் 'ஒரு கட்டுமானத்தின் மேற்பார்வையாளன் நாள் முழுவதும் பெர்ரி பழங்களை கொய்து கொண்டிருப்பது எவ்வளவு அவமானம்.' என்று தனியே புலம்பிக் கொண்டிருக்கும் ஆயிரம் வாயனை காண்கின்றனர்.  
ஆயிரம் வாயன் இவர்களை கண்டதும் யாரையோ மனதில் எண்ணி மிரண்டு ஓடுகிறான். 




அவனை தொடர்ந்து செல்லும் யகரியும் இடிக்குட்டியும் மலை உச்சியில் காணாமல் போனவர்களை அடிமையாக வைத்து உண்டு கொழுக்கும் ஒரு கொடுங்கரடியை சந்திக்கின்றனர்.


 எளியவர்களின் உழைப்பை உறிஞ்சி கொழுக்கும் முதலாளிகளைப் போல சிறு விலங்குகளை மிரட்டி தனக்கு உணவு தேடிக் கொண்டு வரச்செய்கிறது அந்தக் கொடுங்கரடி.




அந்த இழி செயலை தைரியமாக எதிர்க்கும் யகரியை கொடுங்கரடி தாக்க முயல்கிறது.


அதனிடமிருந்து தப்பி வந்த யகரி ஆயிரம் வாயனை சந்திக்கிறான். ஒற்றுமையாக கொடுங்கரடியை எதிர்க்க அழைக்கிறான். 

ஆனால் எதிரியின் பலம், பலவீனம்  அறிந்து தாக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ள ஆயிரம் வாயன் பலம் மிக்க கொடுங்கரடியை எதிர்க்க முடியாது என்றும் தங்களை மறந்து விடும்படியும் கூறிச் செல்கிறான்.




நண்பர்களை மீட்கும் வழிவகை புரியாமல் யகரி திகைக்கும் போது அவனது சோதனையான நேரங்களில் வழி நடத்தும் குலதெய்வம்   பெரும் கழுகார் வருகிறார். நம்பிக்கையை எந்நேரத்திலும் இழக்கக்கூடாது என்று தேற்றுகிறார். பொறுமையே சிறந்த நண்பன் என்றும்
குளிர்காலம் பிரச்சனைக்குத் தீர்வை கொண்டு வரும் என்றும் கூறிச்செல்கிறார்.


பெரும் கழுகார் கூறியதை யோசிக்கும் யகரிக்கு கரடிகள் குளிர்காலத்தில் உறங்கும் வழக்கம் நினைவுக்கு வருகிறது.

மற்ற தோழர்களுடனும் பீவெர் கிராமத்தினருடனும் கலந்தாலோசித்து இலையுதிர் காலத்தின் முடிவில் கொடுங்கரடிக்கு இறால், சால்மன் மீன், கனிந்த பெர்ரி பழங்கள்,  இனிப்பு மிகுந்த தேனடை என பலமான விருந்துக்கு ஏற்பாடு செய்கிறான்.

வயிறு புடைக்க அனைத்தையும் உண்ட கொடுங்கரடி கும்பகர்ணனைப் போல தூங்குகிறது. குளிர்காலமும் துவங்குகிறது.






குளிர்கால உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட கொடுங்கரடியிடமிருந்து நண்பர்களுக்கு நிரந்தரமான விடுதலையை அளிக்க தீர்மானித்த யகரி கொடுங்கரடியை தோழர்களின் உதவியுடன் பனியில் இழுத்துச் சென்று நீர் உறைந்த ஏரி சூழ்ந்த ஒரு தீவின் குகையில் சேர்க்கிறான். 




குளிர்காலத்தின் முடிவில் உறக்கம் கலைந்து எழும் கொடுங்கரடி ஆற்றுநீர் சூழ்ந்த தீவில் தான் தனிமையில் சிக்கி இருப்பதை உணர்ந்து உதவி கோருகிறது.  அதனிடம் 
தன் நண்பர்களுக்கு மீண்டும் தொல்லை கொடுப்பதில்லை என்ற உறுதியை வாங்கிக் கொண்டு அதற்கு நீந்த கற்றுக் கொடுத்து கரையேற்றுகிறான் யகரி.  

மறுநாள்
யகரியின் தோழர்கள்  அனைவருக்கும் விருந்தளித்து மகிழ்ந்தது யகரியின் முயற்சியால் திருந்திய கொடுங்கரடி.


மீண்டும் சந்திப்போம்!



********










Raccoon 

ரக்கூன் என்பது வட அமெரிக்காவில் பெரிதும் காணப்படும் நடுத்தர அளவுள்ள விலங்கு ஆகும். இவை ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் சில இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 ரக்கூன் 42-71 செமீ நீளம் உடையது. கிட்டத்தட்ட 22.8-30.4 செமீ உயரம் உடையது. அதன் எடை 3.8-9.0 கிகி-க்கு இடைப்பட்டது. இவை ரொறன்ரோ போன்ற பெரும் நகரங்களிலும் வாழ்கின்றன. பெரும் நகரங்களில் ரக்கூன்கள் இரவில் இரை தேடி அலையும் போது அவதானிக்க முடியும்.


Owl

Range of the owl, all species. ஒலிப்பு (உதவி·தகவல்)) ஸ்ட்றைஜிபோர்மெஸ் வரிசையைச் சேர்ந்த, தனித்த, இரவில் திரியும் 200 வகைப் பறவைகளில் ஒன்றைக் குறிக்கும். ஆந்தைகள் பெரும்பாலும் சிறிய பாலூட்டிகள், பூச்சிகள், மற்றும் ஏனைய பறவைகளை வேட்டையாடும்.



Otter

நீர்நாய் (Otter) என்பது நீரில் வாழ தன்னை ஓரளவு தகவமைத்துக்கொண்ட ஒருவகைப் பாலூட்டி விலங்கு. நீர்நாய்கள் பொதுவாக மீன்கள், சிறிய நிலநீர்வாழிகள், பறவைகள் முதலியவற்றை இரையாகக் கொள்கின்றன. நீர்நாய்களில் மொத்தம் 13 சிற்றினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.



Grizzly


கொடுங்கரடி (Grizzly bear) ஒரு வகைக் கரடி இனமாகும். இது வட அமெரிக்காவின் மேற்குப் பகுதி உயர்நிலங்களில் வாழ்கிறது. இது 180 முதல் 680 கிலோகிராம் எடையுடையதாகக் காணப்படுகிறது. கொடுங்கரடிகளில் ஆண் கரடி பெண்ணைவிட 1.8 மடங்கு எடையுடையதாகும்.



கரடி (About this soundஒலிப்பு (உதவி·தகவல்)) (Bear), ஒரு ஊனுண்ணிப் பாலூட்டி விலங்கு இவ்வினத்தைச் சேர்ந்த பனிக்கரடிகளும், கொடுங்கரடிகள் (Grizzly bear) என்னும் பழுப்பு நிறக்கரடிகளும் ஊனுண்ணிப் பாலூட்டிகள் யாவற்றினும் மிக பெரியது ஆகும் . ஆசியக் கருங்கரடி போன்ற சில சிறியவகைக் கரடிகள் அனைத்துண்ணிகளாக உள்ளன.

 துருவக் கரடிகள் பெரிய உருவத்தைக் கொண்டவை. இவை, பனி படர்ந்த துருவப் பகுதியில் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் வெண்மை நிறம் கொண்டவை. எஸ்கிமோக்களின் மொழியில் "ஆர்க்டோஸ் (Arctos) என்றால் கரடிகளின் பிரதேசம் என்று அர்த்தம். இதனால்தான் வட துருவப் பகுதிக்கு "ஆர்க்டிக்' என்ற பெயர் வந்தது.


உயிரின அறிவியலார் கரடியினத்தை ஊர்சிடே (Ursidae) என்னும் பெரும் பிரிவில் காட்டுவர். ஊர்சசு (Ursus) என்றால் இலத்தீன் மொழியில் கரடி என்று பொருள். இதன் அடிப்படையில் ஊர்சிடே என்பது இவ்வினத்தைக் குறித்தது. இந்த ஊர்சிடேயின் உட்பிரிவில் ஐந்தே ஐந்து இனங்கள் தாம் உள்ளன. அவற்றுள் நான்கினுடைய உட்பிரிவில் ஒவ்வொன்றுக்கும் ஒரு வகைதான் உள்ளது. ஆப்பிரிக்கக் கண்டத்திலும், ஆஸ்திரேலியாவிலும் கரடிகள் இல்லை. 

தென் அமெரிக்காவின் வட பகுதியில் மட்டும் சிறு நிலப்பரப்பிலே சில வகை கரடிகள் வாழ்கின்றன. கரடிகளின் கண்கள் சிறிதாக இருக்கும். இவை, குறைந்த பார்வைத் திறன் உடையவை ஆனால் நல்ல மோப்பத் திறனும் கேட்கும் திறனும் கொண்டவை; உடலில் அதிக முடிகளைக் கொண்டுள்ளன. மேலும் இவை இரண்டு கால்களினால் நிற்க வல்லவை. கரடிகள், வேட்டையாடவும் எதிரிகளைத்தாக்கவும் நீண்டு வளைந்திருக்கும் தங்கள் கூரான நகங்களைப் பயன்படுத்துகின்றன. இந்த நகங்களில் சகதியும் அழுக்கும் சேர்ந்திருக்கும். பாக்டீரியாக்கள் மிகுந்திருக்கும். எனவே இவற்றால் தாக்கப்படுபவரின் காயங்கள் எளிதில் குணமடையாது.


கரடிகள் சராசரியாக நான்கு அடி உயரமும் நூற்றுப் பதினைந்து கிலோ எடையும் கொண்டவை. தோலுக்காகவும், மருத்துவ குணம் கொண்டதாகக் கருதப்படும் அவற்றின் கணையத்திற்காகவும் அவை வேட்டையாடப்படுகின்றன. கோடை காலத்தில் கரடிகள் இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் கர்ப்ப காலம் ஏழு மாதங்கள். ஒரு முறையில் இரண்டு குட்டிகள் பிறக்கும். குட்டிகளுக்கு இரண்டு அல்லது மூன்று வயதாகும் வரை அம்மாக் கரடிகள்தான் முதுகில் தங்கள் குட்டிகளைச் சுமந்து செல்லும். குளிர் மிகுந்த பகுதிகளில் வாழும் கரடிகள் மிகக் கடுமையான குளிர்காலம் முழுவதையும் ஆழ்ந்த உறக்கத்திலேயே (Hibernation ) கழித்துவிடுகின்றன.

 துருவப் பகுதியில் வாழும் கரடிகள் பல மாதங்கள் இப்படி உறங்கும் தனித்துவமான தன்மை கொண்டவை. அவ்வாறு உறங்கும் போது இவற்றின் உடலில் இருக்கும் சக்தி விரயமாகாமல் இருப்பதற்காக இவற்றின் இதயத் துடிப்பு மிகவும் குறைந்துவிடும். இவ்வாறு சுய நினைவு இல்லாமல் இருக்கும் நிலையில் இவை குட்டிகளை ஈனுகின்றன. துருவக் கரடிகள் ஒரு முறையில் ஒன்றிலிருந்து மூன்று குட்டிகள் ஈனும்.



*********




Friday, February 11, 2022

பீவெர்களின் கிராமம்

 





அந்த கோடைக்காலம் சியோக்ஸ் முகாமில் அமைதியாக கழிந்து கொண்டிருந்தது.







  இடிக்குட்டியும் யகரியும் ஆற்றுக்கு குளிக்க சென்றனர். ஆற்றில் சிறிது விளையாடிய பின் நதியின் முடிவுப்பகுதிக்கு சென்று பார்க்க விரும்பினர்.

வழியில் ஆற்றின் குறுக்கே பாலம் போன்று அமைந்திருந்த மரக்கட்டைகளின் குவியல் மீது ஏறி கடக்க முயலும்போது ஆயிரம் வாயன் எனும் பீவெர்   'பொறுக்கிகளே மற்றவர்களின் வேலையைக் கெடுக்காதீர்கள். சீக்கிரம் கீழே இறங்குங்கள் கொள்ளைக்காரர்கள் , நாசக்காரர்கள்'  என பலவாறு அர்ச்சனை செய்தான்.

குழப்பமுற்ற யகரியும்  இடிக்குட்டியும் மரக்கட்டைகள் மீதிருந்து கீழே இறங்கினர். 

 அப்போது ' என்ன நடக்கிறது? ' என கேட்டவாறு வரும்  மர அணை என்ற  பீவெரிடம் ஆயிரம் வாயன்  ' இந்த பிடரி மயிர் கொண்ட நான்கு கால் பிராணியும், இறகு அணிந்த இரண்டுகால் பிராணியும் அணை மீது ஏறி வேலையை நாசம் செய்கின்றனர்' என புகார் செய்தான். 

அணையை பரிசோதித்த மரஅணை, 'தீவிரமான பாதிப்பு ஏதுமில்லை' என ஆயிரம் வாயனை அமைதிப்படுத்தி விட்டு,  யகரியும் இடிக்குட்டியும் பயந்து ஓடிப்போகாமல் இருந்ததை பாராட்டினார்.  பின்னர், தாங்கள் பீவெர் பழங்குடிகள் என்றும் அங்கு அணை கட்டி வசிக்கப் போவதாகவும்  யகரிக்கு விளக்கினார்.

 ' தண்ணீரிலா வசிக்கப் போகிறீர்கள்?' என வியப்புடன் கேட்டான் யகரி.




அப்போது சில  பீவெர்கள் மரக்கட்டைகளை கொண்டு வந்தன. ஆயிரம் வாயன் 'வேலை செய்பவர்களின் பாதையை மறிக்காமல்   ஒதுங்கி இருங்கள்'  என்று சிடுசிடுத்தான்.

பீவெர்களில் ஒன்று இடிக்குட்டி  மீது சவாரி செய்ய ஆசைப்பட்டது. யகரியும் சம்மதித்தான். அதைப்பார்த்த மற்ற பீவெர்களும் ஆயிரம் வாயனின் ' வேலை என்னாகிறது?' என்ற புலம்பலை மீறி இடிக்குட்டி மீது ஏறி அமர்ந்தன.




இதனால் கடுப்பான இடிக்குட்டி  'உங்களுக்கு குதிரைச்சவாரி வேணுமோ?' என்று புன்னகையுடன் கேட்டு,  புயல் வேகத்தில் கிளம்பியது. அதன் பாய்ச்சலில் பீவெர்கள் ஒவ்வொன்றாக தூக்கியெறியப்பட்டன. இடிக்குட்டியின் பாதையில் அணை குறுக்கிட,  ஆயிரம் வாயன் அணையின் கதியைப்பற்றி  கவலைப்பட்டுக் கதற, இடிக்குட்டி ஒரே தாவலில் அணையை தாண்டி சாகஸம் செய்தது. 

  ஆயிரம் வாயன் ' அந்தக்குதிரை என்னை வெறிகொள்ளச்செய்கிறது, வெட்டி கூறு வைச்சுடுவேன். என கொந்தளித்தான்.
பின்னர் குதிரைச்சவாரியில் நீண்ட நேரம் சென்று விட்டது,  மீண்டும் வேலைக்குத் திரும்புங்கள்.' என உத்தரவிட்டான்.

 மர அணை யகரியிடம் 'சுண்ணாம்பு, மண் மற்றும் உதிர்ந்த இலைகளைக் கொண்டு அணையை பூசுவோம், நீரின் வேகம் குறைந்த பின் எங்கள் குடிசைகளைக் கட்ட ஆரம்பிப்போம்' என்று தெரிவித்தார்.

 மீண்டும் வருவதாகக் கூறி கிளம்பினான் யகரி.
 '



நீங்கள் போனால் ரொம்ப உபயோகமா இருக்கும்,  எதையும் சேதப்படுத்தாதீங்க' என ஆயிரம் வாயன் கூறினான்.

 'எப்போது வேண்டுமானாலும் வாருங்கள்' என மரஅணை புன்னகையுடன் வழியனுப்பினார் .

'அருமையான பீவெர்கள்' என்றான் யகரி.

'கொஞ்ச பேரு ஓவரா கூவுறாங்க' என்றது இடிக்குட்டி.




அப்போது அவர்களுக்கு 'லிண்டென்  மரம்' எனும் சுட்டித்தனம் நிறைந்த பீவெர் குட்டி அறிமுகமாகிறது.


( Linden என்பது Tiliaceae குடும்பத்தைச் சேர்ந்த மரவகை)




 சிலநாள் கழித்து மீண்டும் பீவெர்களை பார்த்து வர இடிக்குட்டியுடன் கிளம்பினான் யகரி.
வழியில் பெரிய மரம் ஒன்றை வீழ்த்த முயன்று கொண்டிருந்த இரட்டைப்பல்லன் என்ற பீவெரை சந்தித்தனர். தன்னுடைய ஓய்வு நேரத்தில்  சிறந்த கலைப்படைப்பு ஒன்றை படைக்க இருப்பதாக  இரட்டைப்பல்லன் தெரிவித்தான்.

'இரட்டைப்பல்லன் மற்ற பீவெர்களிடமிருந்து வித்தியாசமாகக் காணப்படுகிறார்' என்றான் யகரி.

தான் ஒரு 'கலைஞன்' என்பதால் அப்படித் தெரியலாம் என்றான் இரட்டைப்பல்லன்.
 
அப்போது  'காட்டுரோஜா' என்ற பீவெர் இலைகளை சேகரித்துக் கொண்டிருப்பதையும், கரடி  ஒன்று அவளை தாக்க வருவதையும் கண்டனர்.




இட்டைப்பல்லன் மின்னல் வேகத்தில் மரம் ஒன்றை  வெட்டித்தர, அதன் மூலம் கரடியை தாக்கி விரட்டினான் யகரி.

காட்டு ரோஜா யகரிக்கு நன்றி சொன்னாள். 

அனைவரும் இரட்டைப்பல்லன் இன்னும் வேலைக்குத் திரும்பாதது பற்றி ஆயிரம் வாயன் கடுகடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் அணை கட்டும் இடத்தை சென்றடைந்தர்.

இரட்டைப்பல்லன் யகரியின் சாகஸத்தை மற்றவர்களுக்கு விவரித்தான்.
 காட்டு ரோஜா யகரியும் இடிக்குட்டியும் தைரியமானவர்கள் என்று பாராட்டினாள்.  


அப்போது முரட்டுப்பலகை, காட்டு ரோஜா தம்பதியின் சுட்டி வாரிசான லிண்டென்  மரம் அவர்களை 'வல்லமை மிக்கவர்கள்' என்று கூறினான்.  காட்டு ரோஜா  லிண்டென்  மரத்திடம், 'எதையும் மிகைப்படுத்திச் சொல்லக்கூடாது' என்று கூறினாள்.

யகரி மர அணையிடம், வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பதாக கூறினான். 
'இன்னும் சில நாட்களில் குடிசைகள் தயாராகி விடும்' என்று மரஅணை தெரிவித்தார்.

அப்போது ஆயிரம் வாயன் யகரி, இரட்டைப்பல்லன்,  இடிக்குட்டி  ஆகியோரை அணையின் கரையை வலுப்படுத்த மேலும் மரங்கள் சேரிக்க அழைத்தான்.




மரங்கள் அடர்ந்த பகுதியில் 'மரப்படுக்கை' என்னும் எப்போதும் குறட்டை விட்டுத்தூங்கும் இயல்பு கொண்ட பீவெரை சந்தித்தனர். ஆயிரம் வாயன் அந்த சோம்பறியை எழுப்பி விட்டும் அவன் மீண்டும் தூங்கி விடுகிறான்.

மரங்களை இரட்டைப்பல்லன் வெட்டித்தர,  அனைத்தையும் இடிக்குட்டி இழுத்து வந்தது. ஆயிரம் வாயன் மூவர் அணியின் திறமையை பாராட்டினான். 



திரும்பும் வழியில் மரப்படுக்கையை மீண்டும் சந்தித்தனர். மரக்கட்டைகளின் குவியலைக் கண்டு 'அற்புதம்' என குதுகலிக்கும் மரப்படுக்கை அதன் மீதே ஏறிப்படுத்து தூங்கி விட்டான். மரப்படுக்கையை திருத்த முடியாது என்று ஆயிரம் வாயன் அலுத்துக் கொண்டான். 
அந்த ஊர்வலத்தை காணும் கடமான் ஒன்று 'எதுவும் வளர்ச்சியை தடுக்க முடியாது' என்று கூறியது.

மரத்தடிகளை அணைப்பகுதியில் சேர்த்த பின் களைத்துப் போன யகரியை 'மறுநாளும் வருவாயா?' என ஆயிரம் வாயன் கேட்கிறான். யகரி பதிலளிக்கும் முன், காட்டு ரோஜா, பிர்ச் மரப்பட்டைகளை உண்ண. யகரியை அழைத்தாள். மறுநாள் வருவதாக கூறி கிளம்பினான் யகரி. வீடு திரும்பும் வழியில் இரட்டைப்பல்லன் இன்னமும் களைப்பின்றி வேலை செய்யும் சத்தம் கேட்கிறது. 

அப்போது எருமை விதையின் அம்பு ஒன்று அவர்களை உரசாத குறையாக கடந்து மரத்தில் பதிந்தது.
 
 அவர்களை வேட்டைக்கான விலங்கு என நினைத்து விட்டதாக தெரிவித்தான் எருமை விதை. 




' ஒரு உண்மையான வேட்டைக்காரன் வில்லை நீட்டும் முன் கண்களை திறந்து வைத்துக்கொள்வான்' என யகரி அவனை எச்சரித்தான் .


யகரியை 'இன்றும் விளையாட வரவில்லையே? ' என ஆச்சரியத்துடன் வினவினாள் வானவில்.

ஆற்றுப்பகுதியில் வேலை செய்ததாக தெரிவித்தான் யகரி, வேலையா? என வியந்தாள் வானவில்.




இடிக்குட்டியிடம் 'நமக்கு நல்ல உறக்கம் தேவை! காலையில் சீக்கிரம் எழ வேண்டும்.' என தெரிவித்தான் யகரி. அதை மறைந்திருந்து கேட்கும் வானவில் தானும் காலையில் சீக்கிரம் எழ தீர்மானிக்கிறாள்.

மறுநாள் அதிகாலையில் யகரி கிளம்பும்போது வானவில் தானும் வருவதாக கூறினாள். முதலில் தயங்கும் யகரி வானவில்லின் ஏமாற்றத்தை உணர்ந்து சம்மதித்தான்.

வழியில் பெர்ரி பழங்களை சேகரிக்கிறான் யகரி, காரணம் கேட்கும் வானவில்லுக்கு 'பிர்ச் மரப்பட்டைகளை விட இது நன்றாக இருக்கும்.' என்றான்.
 
ஆற்றை நெருங்கும்போது இரட்டைப்பல்லன் வேலை செய்யும் சத்தம் கேட்கிறது. புரியாமல் விழிக்கும் வானவில்லுக்கு யகரி, அணைப்பகுதியில் அனைத்தும் புரியும் என பதிலளித்தான்.



அணைப்பகுதியில் காட்டு ரோஜா  'லிண்டென்  மரம்'  காணாமல் போய் விட்டதாக கூறுகிறாள். 

  முரட்டுப்பலகையும் ஆயிரம் வாயனும் லிண்டென்  மரம் வழக்கமாக விளையாடும் ஆற்றின் கீழ்ப்பகுதிக்கு அவனைத்தேடி போயிருப்பதை தெரிந்து கொண்ட யகரி  அங்கே  விரைகிறான்.


அங்கு நிகழ்பவை புரியாமல் குழம்பும் வானவில்லுக்கு விவரங்களை எடுத்துக்கூறி,  தனக்கு விலங்குகளுடன் பேசும் திறமை இருப்பதை இரகசியமாக வைத்திருக்கும்படி சொல்கிறான்.

ஆற்றுப்பகுதியில் முரட்டுப்பலகையையும் ஆயிரம் வாயனையும் கண்டார்கள்,  லிண்டென்  மரம் இன்னும் அதிக தூரத்தில் இருக்கலாம் என்றான் ஆயிரம் வாயன்.  அவர்களை தாண்டி விரைவாக அருவிப்பகுதியை வந்தடைகிறது யகரியின் குழு. 



அங்கு லிண்டென்  மரத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. நீர்வீழ்ச்சியில் லிண்டென்  மரம் மூழ்கியிருக்கலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வருகின்றனர்.





அப்போது யகரியின் குலதெய்வமான பெரும் கழுகார் அங்கு வருகிறார். அவர்கள் லிண்டென்  மரத்தை  இழக்கவில்லை என்றும்  ஆற்றுநீர் நிலத்தடியில் ஓடும் ஒரு குகைப்பகுதிக்குள் அவன் உயிரோடு இருக்கிறான் என்றும் தைரியம் அளித்துச் செல்கிறார்.




தாமதிக்காமல் நிலத்தடி ஆற்றுக்குள் பாய்ந்து செல்லும் யகரி லிண்டென்  மரத்தை ஒரு குகைப்பகுதியில் கண்டு பிடித்தான்.  அங்கிருந்து வெளியேற முடியாத வண்ணம் மேல் திறப்பு வெகு உயரத்தில் உள்ளது. வானவில்லும் இடிக்குட்டியும் கவலைப்படத் துவங்கிய நேரத்தில் யகரியின் குரல் கேட்டு  விரைந்தனர். யகரியின் யோசனைப்படி முரட்டுப்பலகையும் ஆயிரம் வாயனும் ஒரு பெரும் மரத்தை ஏணி போல் செதுக்கித்தர, அதன் உதவியுடன் லிண்டென்  மரமும் யகரியும் மேலேறி வந்தனர்.




லிண்டென்  மரம் தன் தந்தையிடம் 'வாழ்க்கைல இப்படி ஜாலியா இருந்ததில்ல அப்பா!' என்று உற்சாகமாக கூறினான். மேலும் அதே விளையாட்டை மீண்டும் விளையாட யகரியை அழைத்தான். இதனால் கடுப்பான முரட்டுப்பலகை லிண்டென்  மரத்தை குப்புறப் போட்டு நாலு சாத்து சாத்தினான். 
இதற்கு முன் இப்படி சாத்து வாங்கியதில்லை என்று கூறினான் லிண்டென்  மரம், வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் 'முதல்முறை என்பது உண்டு' என்றது இடிக்குட்டி.


காட்டு ரோஜாவும் மற்ற பீவெர்களும் லிண்டென்  மரம் நலமாக திரும்பி வந்ததில் மகிழ்வடைந்தனர். 

மூன்று நாட்களில் கிராமம் முழுமை பெற்று விடும் என்று மர அணை கூறினார். '
ஒருவழியாக நாம் பிர்ச் மரப்பட்டைகளை ருசிக்கலாம்' என்று கூறினாள் காட்டு ரோஜா.

 அப்போது பூம்ம்! என்று பெரும் சத்தம் எழுந்தது.  




அது என்ன?  என்றாள் காட்டுரோஜா

பூகம்பமோ?  என்றான் முரட்டுப்பலகை

இடியோசையோ?  என்றான் ஆயிரம் வாயன்

யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்ததே?  என்றான் மரப்படுக்கை

'பயப்பட வேண்டாம்! அது இரட்டைப்பல்லனின் வேலையாகதான் இருக்கும்' என்று கூறினான் யகரி


அடுத்த மூன்று நாட்களில் 
இரட்டைப்பல்லன் தன்னுடைய இரகசிய கலைப்படைப்பை உருவாக்கி  யகரி குழுவினரின் உதவியுடன் நதியில் சேர்க்கிறான். 




அணை மற்றும் குடிசைகள் கட்டும் வேலை முடிந்து  பீவெர்களின் கிராமம்  வசிக்க தயாராகி இருந்தது.

அப்போது இன்ப அதிர்ச்சியாக இரட்டைப்பல்லனின் கலைப்படைப்பு அங்கு வந்து சேர்கிறது. 

அதை அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
லிண்டென்  மரம் அதில் ஏறி உற்சாகமாக விளையாடத் துவங்கினான்.

அணையை உருவாக்க உழைத்த உழைப்பாளிகளின்  நினைவுச்சின்னம் நதியின் அணைப்பகுதியில் பெருமையுடன்  நின்றது. அங்கே கொண்டாட்டங்கள் துவங்கின.

முற்றும்





*******

Linden tree




Beaver 

பழுப்பு நிற மென்மயிரும் அகன்ற தட்டையான வாலும் கூர்மையான பற்களும் உடைய, நிலம், நீர் இரண்டிலும் வாழும், ஆறுகளின் குறுக்கே மரக்கிளைகளைக் கொண்டு அணையிடும் விலங்கு வகை;

பீவெர் என்பது பகுதி-நீர்வாழ் (semi-aquatic) கொறி உயிரி (rodents) ஆகும். இது தென் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் இயற்கை வசிப்பிடமாக கொண்டது.

பீவெர்கள் ஆற்றில் அணைகட்டி குளம்போல அமைத்து அங்கு சிறு தடிகள் தாவரங்கள் போன்றவற்றை கொண்டு தங்களது இருப்பிடத்தினை அமைத்து வாழும். இச்செயல்பாட்டில் இவை ஈடுபடும் நேர்த்தி, சுறுசுறுப்பு பீவெர்கள் பலரை கவர காரணமாய் அமைந்துள்ளது.

உலகில் இரண்டாவது பெரிய கொறி உயிர் இதுவேயாகும். பீவெர்கள் தங்கள் வாழ்க்கைக்காலம் முழுதும் வளர்கின்றன. முதிர்ந்த பீவெர்கள் சுமார் 25 கிலோ வரை எடையுள்ளவை. பெண் நீர் எலிகள் ஆண்கள் அளவுக்கோ அல்லது அவற்றிலும் பெரிதாகவோ வளர்கின்றன. இது பொதுவாக வேறு பாலூட்டிகளில் காணப்படாத தன்மையாகும்.

ஐரோப்பிய நீர் பீவெர்கள் ஒரு நிலையில் அவற்றின் உரோமத்துக்காகவும், ஒருவகை வாசனைத் திரவியத்துக்காகவும் வேட்டையாடப்பட்டு அழியும் நிலையிலிருந்தன. எனினும் பின்னர் மீண்டும் ஐரோப்பா முழுவதும் கொண்டுவரப்பட்டுள்ளன. தற்பொழுது, எல்பே (Elbe), ரோன் (Rhone) ஆகிய இடங்களிலும், ஸ்கண்டினேவியாவின் பகுதிகளிலும், பீவெர்கள் ஆயிரக்கணக்கில் வாழ்கின்றன. பவேரியா, நெதர்லாந்து ஆகிய இடங்களுக்கும் இவை புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அவை புதிய இடங்களுக்கும் பரவி வருகின்றன. ஐக்கிய இராச்சியத்தில், பீவெர்கள், 17 ஆம் நூற்றாண்டளவில் அழிந்துவிட்டன.

அமெரிக்க பீவெர் கனடாவின் தேசிய விலங்காகும். இது கனடாவின் ஐந்து சத நாணயத்தில் இடம் பெற்றுள்ளதுடன், அந்நாட்டின் முதலாவது தபால்தலையிலும் இடம் பெற்றிருந்தது. எனினும் நாட்டின் பல பகுதிகளில் இது தொல்லை கொடுக்கும் பிராணியாகக் கருதப்படுகிறது.
 

*******