தன்னுடைய பழைய சாகசங்களில் ஒன்றைத் தீவிரமாக நினைவுகூரும்போது வழக்கமாகச் செய்வது போலவே, ஹோம்ஸ் தன் இருக்கையிலிருந்து எழுந்து அந்த அறைக்குள் அங்கும் இங்குமாக உலவத் தொடங்கினார்.
இலையுதிர்காலம் முடிவுக்கு வந்து கொண்டிருந்த ஒரு நாள், என்று அவர் தொடர்ந்தார். லண்டனில் இருந்த எனது அறைக்கு விக்டர் ட்ரெவரிடமிருந்து ஒரு தந்தி வந்தது. தான் பெரும் துயரத்தில் இருப்பதாகவும், எனது ஆலோசனையும் உதவியும் அவனுக்கு மிக அவசியமாகத் தேவைப்படுவதாகவும், உடனே கோனித்தோர்ப்பிற்கு வரும்படியும் அவன் என்னைக் கெஞ்சிக் கேட்டிருந்தான். சொல்ல வேண்டியதே இல்லை... கையில் இருந்த வேலைகள் அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு, மீண்டும் வடக்கு நோக்கிப் பயணமானேன்.
இரயில் நிலையத்தில் விக்டர் ஒரு குதிரை வண்டியுடன் எனக்காகக் காத்திருந்தான். அவனை ஒரே பார்வையில் பார்த்த மாத்திரத்திலேயே எனக்குப் புரிந்துவிட்டது; கடந்த இரண்டு மாதங்கள் அவனுக்கு எவ்வளவு சோதனையான காலங்களாக இருந்திருக்கும் என்று! அவன் உடல் மெலிந்து, முகம் கவலை தோய்ந்து போயிருந்தது.
விக்டர் என்னைப் பார்த்ததும் சொன்ன முதல் வார்த்தைகள் இவைதான்: என் தந்தை மரணப் பிடியில் இருக்கிறார்!
அசாத்தியம்! என்ன நடந்தது அவருக்கு? என்று நான் திகைப்புடன் கத்தினேன்.
பக்கவாதம் ... நரம்புத் தளர்ச்சி... அதிர்ச்சி! என்று விக்டர் பதிலளித்தான். இன்று முழுவதுமே அவர் மரண விளிம்பில்தான் போராடிக்கொண்டிருக்கிறார். நாம் வீட்டிற்குச் செல்வதற்குள் அவர் உயிரோடு இருப்பாரா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.
இதற்கெல்லாம் என்ன காரணம்? என்று நான் கேட்டேன்.
ஆ! அதுதான் இப்போது இருக்கும் மிக முக்கியமான மர்மம் என்று விக்டர் வருத்தத்துடன் கூறினான்.

.jpg)



No comments:
Post a Comment