Thursday, June 9, 2022

பாலைவனத்தின் "மன்னா"

 


எகிப்தியரின் அடிமைத்தளையிலிருந்து இஸ்ரவேலரை மீட்டு வழி நடத்தியபோது, பாலைவனத்தில் இஸ்ரவேல் மக்களின் பசியை தீர்க்க கடவுள் தினமும் "மன்னா" எனும் உணவை மழையாக  பொழிந்தார்.
#யாத்திராகமம்


இஸ்ரவேலருக்கு பாலைவனத்தில் பொழிந்த மன்னா போல,  செவ்விந்தியருக்கு  எண்ணற்ற எருமை மந்தையை அவர்களின் தெய்வமான வாகோண்டா கொடுத்தார்.




எருமைகளின் வாழ்முறையை நேரில் காண செல்லும் யகரி ஒரு எருமைக்குட்டியையும் அதன் தாயையும் ஓநாய்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுகிறான்.

ஓநாயின் வாலில் யகரி தீ வைக்கும் இடமும், பாதையை மறிக்கும் ஓநாய்களை  இடிக்குட்டி தாண்டி சாகஸம் பண்ணும் இடமும், இறுதியில் ஓநாய்க்கு இடிக்குட்டி உதை விட்டு பறக்க வைக்கும் இடமும் விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் நிறைந்தவை.

எருமைகள் சேற்றில் புரள்வது கொசுக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக என்பது புதிய தகவல்.





மந்தை ஒரு பரந்த நதியைப் போல நகர்ந்தது, தொடர்ந்து சிறிய நீரோடைகளால் இணைக்கப்பட்டது.  



******

No comments:

Post a Comment