Thursday, May 26, 2022

வானவில்லை காணவில்லை...



சியோக்ஸ் கிராமத்தின் ஓரிரவுக் கூட்டத்தில் ஊர் சுற்றிப் பெரியவர் தான் பனிமலைக்கு சென்று வந்ததையும் அங்கு அனைத்தும் வெண்மையாக இருந்ததையும் வெள்ளைக் கரடிகளை கண்டு வந்ததையும் விவரிக்கிறார்.

அதைக் கேட்கும் வானவில் தானும் வெள்ளைக்கரடிகளை காணும் ஆவலில் மந்திரக்காலணிகளின் உதவியுடன் பனிநிலத்தை தேடிச் செல்கிறாள்.

அவளது குலதெய்வமும் பாதுகாவலருமான பெரும் முயலார் நானாபோஸாவும் யகரியும் அவளை தேடி புறப்பட்டனர். 

வானவில்லின் சுவடுகளை தொடர்ந்தும் மந்தி அம்பின் வழிகாட்டுதலிலும் கடுமையாக பயணம் செய்து அவர்கள் வானவில்லிடம் சென்றடைந்தனர்.

அவர்களை மந்திரப்படகு ஒன்று பனிநிலத்திற்கு பறந்து சேர்த்தது. அங்கே அவர்கள் வெள்ளைக்கரடிகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.




இதுவரை நான் வாசித்த யகரியின் கதைகளில் இயற்கை அபாயங்கள், காட்டு விலங்குகளின் வாழ்க்கை முறைகள் போன்ற கதை சொல்லலிருந்து இக்கதை மாறுபட்டு மாயாஜாலம் அதிகம் உள்ளது. இறுதியில் அனைத்தும் கனவுதான் என்றே கதையும் முடிகிறது.




 
Nanabhzo

அனிஷினாபே ஆதிசூகானில் (பாரம்பரிய கதைசொல்லல்), குறிப்பாக ஓஜிப்வேயில், நானாபுஷ் என்றும் அழைக்கப்படும் நானாபோஜோ ([nɐˌnɐbʊˈʒʊ]), ஒரு ஆவியாகும், மேலும் உலக உருவாக்கத்தின் கதை உட்பட அவர்களின் கதைசொல்லலில் முக்கிய இடம் வகிக்கிறது.  நானாபோஜோ ஓஜிப்வே தந்திர உருவம் மற்றும் கலாச்சார நாயகன் (இந்த இரண்டு தொல்பொருள்களும் பெரும்பாலும் முதல் நாடுகளின் புராணங்களில், மற்றவற்றுடன் ஒரே உருவமாக இணைக்கப்படுகின்றன).

நானாபுஷ் என்றும் அழைக்கப்படும் நானாபோசோ, பல ஃபர்ஸ்ட் நேஷன் கதை சொல்லல்களில் ஒரு தந்திரமான நபர்.  கதைசொல்லல் மூலம் நானாபுஷைப் பயன்படுத்துவது பொழுதுபோக்காக இருந்தாலும், தகவல் மற்றும் பொதுவான வாழ்க்கைப் பாடங்களைக் கடத்துவதற்கான ஒரு வழியாக இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.  நானாபோஜோ கதை சொல்லலில் ஆண் அல்லது பெண் விலங்குகள் அல்லது மனிதர்களின் வடிவத்தை எடுக்க முடியும்.  மிகவும் பொதுவாக அவை பழங்குடியினருக்கு அருகில் வாழும் காக்கை அல்லது சிறுநரி போன்ற விலங்குகள். அவை பிடிப்பதை கடினமாக்கும் அளவுக்கு தந்திரமானவை




Word: kayak

Tamil Meaning: எஸ்கிமோக்களால் பயன்படுத்தப்படும் பனிப் படகு.

 



இங்கே க்ளிக்! 

பனிக்கரடி





*******


No comments:

Post a Comment