Saturday, December 24, 2022

22,சுழற்காற்று...

 


அந்த இளவேனிற் பிற்பகலில், வானிலை  கடினமாகவும், அதிக வெப்பமாகவும் இருந்தது.

 யகரியின் பழங்குடியினர்  முகாம் அமைத்து தங்கியிருந்த புல்வெளியை பயங்கர சுழற்காற்று தாக்கியது.

சுழற்காற்றில் தூக்கிச் செல்லப்பட்டு காணாமல் போன மாந்த்ரீகரையும், குழம்புக்கண்ணாரையும் பெரும் கழுகாரின் உதவியுடன் மீட்டு வருகிறான் யகரி.



புயலில் அகப்பட்டாலும், மயக்கத்தில் கிடந்தாலும், மரத்திலிருந்து விழுந்தாலும் குழம்புக்கண்ணார் தன் சமாதான புகைக்குழாயை பிரிவதேயில்லை. 😂



வான்கோழிகளுக்கு பாம்புகளிடம் அச்சமில்லை. என்பது  புதிய தகவல்! 😊







நமது மாந்த்ரீகர் இருக்கும் இடம் தெரியுமா பெரும் கழுகாரே?

நிழல் அவனைக் கைதியாக வைத்திருக்கிறது, ஆனால் ஒளி அவனை விடுவிக்கும்! 

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

உதிக்கும் சூரியனுக்கு முன்னால் செல், நீ ஒரு கல் மலையைக் காண்பாய். சூரியனின்  முதல் கதிர்கள் ஓநாயின் கண்  வழியாக செல்லும் தருணத்தைப் பார்!  அது அசையாத கண், 

அது நீ தேடும் மாந்த்ரீகர் மறைந்துள்ள இடத்தை ஒளிரச் செய்யும், இப்போது தூங்கச்செல்!


நீங்கள் புறப்படுகிறீர்களா பெரும் கழுகாரே?

உறங்குவதற்கு உனக்கு குறுகிய நேரமே மீதியுள்ளது யகரி!





இங்கே கிளிக்





இங்கே கிளிக்: வான்கோழிகள்



இங்கே கிளிக்: Campagnol

பழங்குடியினரிடையே உருப்பெறத் துவங்கியிருந்த ஒற்றுமையின்மையை நீக்கவே வானத்தின் சீற்றம் சுழற்காற்றாய் உருவெடுத்தது என 
இறுதியில் மாந்த்ரீகர் யகரிக்கு விளக்கிக் கூறினார்.






No comments:

Post a Comment