Friday, January 20, 2023

17,அச்ச மாளிகை!

 





பிளெண்டிங் மாளிகையின் மர்ம நிகழ்வுகள் தொடர்கின்றன.

பீட்டர் காணாமல் போகிறான். பாதாள அறையில் புதிதாக, பீட்டரின் ஆடை அணிந்த  மண்டையோட்டு சடலம் கண்டு பிடிக்கப்படுகிறது. ஆனால் அது முழு எலும்புக்கூடாக உள்ளது.

இதற்கிடையே மாளிகையில் ஒரு மர்ம மனிதனின் நடமாட்டம் இருப்பதை அறிந்தனர்.



கறுப்பு உடை பெண்மணி மாளிகையில் இருப்பவர்களில் ஒருவர்தான் என்பது உறுதியானது.




அன்றிரவு டைலனை சந்திக்கும் பணிப்பெண் அமாபெல் டைலனிடம் கறுப்பு உடை பெண்மணி பற்றி தனக்கு அனைத்தும் தெரியும் என்று கூறி உண்மைகளை வெளியிட முயல்கிறாள்.
ஆனால் அக்கனத்திலேயே அவளது முகம் தானாக பொசுங்கி மண்டையோடாகி மாண்டு போகிறாள்.

அந்த அறையில் ஒரு இரகசியக் வழியைக் கண்டு பிடிக்கும் டைலன்,  அது ஹானரின் அறையில் முடிவதை காண்கிறார்.
அங்கே மேஜை மீது அப்போதுதான் இயங்கியதன் சூடு குறையாமல் இருக்கிறது ஒரு சைலன்சர் பொருத்தப்பட்ட துப்பாக்கி. அதன் மூலம் சுடப்பட்ட தீப்பிடிக்கும் குண்டு பாய்ந்ததால் தான் அமாபெல்லின் தலை எரிந்து போனது என்பதை டைலன் புரிந்து கொண்டார்.



மறுநாள் இரவு ஹானர் கறுப்பு உடை பெண்மணியால் அந்தரத்தில் உயர்த்தப்பட்டு சுக்கு நூறாக சிதறடிக்கப்பட்டதை மிஸ் மில்ட்ரெட்டும் டெஸ்மாண்டும் கண்டனர். ஆனால் பின்னர் அங்கு வரும் டைலன் ஹானர் வெடித்துச் சிதறிய அறையில் வெடிமருந்தின் நெடியை உணர்ந்தார்.




வாரிசுதாரர்களில் இதுவரை மூவர் மறைந்து விடவே, அடுத்த பலி தான்தான் என பெட்டூலியா அச்சம் கொண்டாள். இறந்து போன அமாபெல்,  வாரிசு இல்லை என்பதால் இந்தக் தொடர்கொலைகள் பட்டியலில் மாளிகையில் உள்ள யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என டைலன் தெரிவித்தார். மேலும் மாளிகையில் மிஞ்சியிருக்கும் நால்வரும் பாதுகாப்புக்காக ஒரே அறையில் தங்கியிருக்க ஏற்பாடாகியது.




சம்பவங்களின்றி இரு நாட்கள் கடந்த பின் டெஸ்மாண்ட் தன் உடல் எழும்புகள் பழையதாகி விட்டன,  என சலித்துக் கொண்டபோது,  டைலனுக்கு பாதாள அறையில் கண்ட பீட்டரின் முழுமையான எலும்புக்கூடு நினைவில் இடறுகிறது. 

மீண்டும் அந்த எலும்புக்கூட்டை ஆராயும் டைலன்,  அது ஒரு பெண்ணின் பழைய எலும்புக்கூடு என்பதை உணர்ந்தார். அது அநேகமாக நிலவறையில் மரணித்த விவியனின் எலும்புக்கூடாக இருக்கலாம்
என தீர்மானித்தனர்.

 அப்படியானால் பீட்டர் எங்கே என்ற கேள்வி எழுந்தது. கொலையாளி பீட்டராக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.




அன்றிரவே மில்ட்ரெட்டும் பெட்டூலாவும் கொல்லப்படுகின்றனர். இறுதியாக உண்மைகளை புரிந்து கொள்ளும் டைலன் டெஸ்மாண்டிடம் பிளெண்டிங் மாளிகையின் கோரக் கொலைகளுக்கான மர்மத்தை விளக்கத் தொடங்கினார்.



கறுப்பு ஆடை அணிந்த ஆவியை பார்த்ததாக பணியாளர்கள் கூட்டாக பொய் சொல்லி இருக்கிறார்கள்.
மூன்றாம் ஹரால்ட் பிளெண்டிங் பிரபுவை கொன்றது அவர்களேதான். நோக்கம் : கோட்டையில் தங்கும் வாரிசுகள் பணத்தாசையால் ஒருவரை ஒருவர் கொன்று கொண்டால் பிளெண்டிங் மாளிகையின் சொத்துகள் பணியாளர்களைச்சேரும். 

கறுப்பு ஆவியுருவம் டைலன் முன் நேரடியாக தோன்றிய தருணங்களில் அமாபெல்லும் மில்ட்ரெட்டும் ஆவி வேஷம் போட்டுள்ளார்கள்.

இடையில் அமாபெல் பயந்து போய் டைலனிடம் உண்மைகளை வெளியிட முயன்றதால் அவளை மில்ட்ரெட் கொன்றாள்.

  மில்ட்ரெட்டை டெஸ்மாண்ட் கொன்று விடுகிறான்.


உள்ளே பூட்டப்பட்ட அறையில் நிகழும் கொலைகளின் மர்மம் : உண்மையில் கொலை நிகழ்ந்த பின் டெஸ்மாண்டால் கதவு வெளிப்பக்கத்தில் பூட்டப்படும், கதவை உடைத்து உள்ளே நுழையும் டெஸ்மாண்ட் பூட்டின் சாவியை கதவின் உள் பக்கத்தில் வைத்து விடுவான். 
பூட்டுக்கும் சாவிக்கும் புழங்கிய தோற்றத்தில் வித்தியாசம் இருந்ததை டைலன் கவனித்தார்.



மறைந்து போகும் காலடித்தடங்கள் : அச்சுப் பிசகாமல் பின்னோக்கி நடக்கும் எளிய தந்திரம்.


டெஸ்மாண்ட் டைலனை சுட முயலும்போது டைலன் அவனை சுட்டு வீழ்த்துகிறார்.


இறுதியில் மற்றவர்கள் மரணிக்கும் வரை  இறந்து விட்டதாக நாடகமாடி மறைந்திருந்த பீட்டர் வெளிப்படுகிறான். சொத்துக்கள் அவனை அடைகிறது.




ஆனால் அவனும் தப்ப முடியவில்லை மரணத்திடமிருந்து...



அழகுப் புயல் பெட்டூலாவின் மரணம் அவளது இரசிகர்களை கலங்கச் செய்வது நிச்சயம். 








No comments:

Post a Comment