Tuesday, January 3, 2023

13,இரத்தத் தாகம்.

 



Dylan Dog 13 

அவர்கள் நம்மிடையே வாழ்கிறார்கள் 
வெளியிடப்பட்டது : 1/10/1987
பொருள்: ஸ்க்லாவி டிடியன்
திரைப்பட ஸ்கிரிப்ட்: ஃபெராண்டினோ கியூசெப்
வரைபடங்கள்: டிரிகோ குஸ்டாவோ
கவர்: வில்லா கிளாடியோ
கதைக்களம்: Tiziano Sclavi
திரைக்கதை: Giuseppe Ferrandino
கலைப்படைப்பு: Gustavo Trigo
Cover: Claudio Villa

 இரத்தக்காட்டேரி உங்கள் அருகில்  இருக்கக்கூடும். நீங்கள் நினைப்பதை விட மிக அருகிலேயே இருக்கக்கூடும். அது ஒரு நண்பனாக, உறவினனாக, உங்கள் மனைவியாக கூட இருக்கலாம்! டைலனுக்கு இது தெரியும், காட்டேரி தனியானது இல்லை என்பது அவருக்குத் தெரியும்.  பல காட்டேரிகள் மனித முகமூடியின் கீழ் மறைந்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அரக்கர்கள். இரவின் தனிமையில் இரத்த தாகத்தில் துடிக்கும் ஒரு பயங்கரமான இருண்ட படைப்பு அவர்களுடையது என்பதையும் அவன் அறிவான்! 

(புத்தக நிறுவனத்தின் அறிமுக உரை) 

இரத்தக்காட்டேரிகளின் சொர்க்க பூமியான டிரான்ஸில்வேனியாவுக்குச் சென்று வந்த பின் இரத்தக்காட்டேரியான  தன் மனைவி சின்டியின் மீதான அன்பால் அவளது இரத்தத் தாகத்தைத் தணிக்க சிலரைக் கொன்று, இரத்தத்தை எடுத்து அவளுக்குக் கொடுக்கிறார் ராபின். 

தான் ஒரு இரத்தக்காட்டேரி என்பதை உணராமல் தன் கணவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு டைலனிடம் உதவி கோருகிறாள் சின்டி.

தன்னை விசாரிக்க வரும் டைலனிடம் மனைவியைக் காட்டிக் கொடுக்க விரும்பாமல் தன்னையே இரத்தக்காட்டேரி என ஒப்புக்கொண்டு, தற்கொலை செய்து கொள்கிறார் ராபின்.

ராபினின் மரணத்துக்குப் பின் தனக்கு எடுக்கும் இரத்தத் தாகத்தின் மூலமாக உண்மையை உணரும் சின்டி, ராபினின் கல்லறையில் வருந்தி நிற்கிறாள்.

இதற்கிடையே ராபின், சின்டி தம்பதியின் மகளான கரோல் டைலனை சந்தித்து தன் தாயின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படுவதாக தெரிவிக்கிறாள்.

தன்னை விசாரிக்க வரும் டைலனின் முன் காட்டேரியாக மாறும் சின்டி டைலனை கொல்ல முயல்கிறாள். அவளிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள அவளை கொல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார் டைலன்.

இறுதியில் கரோலும் ஒரு இரத்தக்காட்டேரி தான் என்றும் காட்டேரிகள் நம்முடன் கலந்து வாழ்கிறார்கள் என்றும் கதை முடிகிறது.

ராபினின் உதவியாளராக வரும் வேரா ஃபாரெட் எனும் கவர்ச்சி மிகு இரத்தக்காட்டேரி டைலனை வீழ்த்த முயன்று மாண்டு போனாலும், தன் அழகால் இரசிகர்களை கிறங்கச் செய்யப் போவது நிச்சயம்.

உண்மையில் இரத்தக் காட்டேரிகள் நம்முடன்தான் வாழ்கின்றனர். பொதுமக்களின் இரத்தத்தை உரிஞ்சும் நேர்மையற்ற அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும், சுயநலவாதிகளும் இரத்த வெறி பிடித்த காட்டேரிகளே. 














No comments:

Post a Comment