Thursday, July 6, 2017

வஞ்சம்...!

                                                       பராகுடா  3. சமர் 


அருகாமை விண்மீனின் பேரொளியின் முன்பாக கண் எட்டா நட்சத்திரங்கள் தம் பிரகாசம் இழப்பது போல, காப்டன் பிளினிற்காக எமிலியோ கொண்ட வஞ்சத்தின் முன்னாக இந்த பாகத்தின் பிற நிகழ்வுகள் ஒளி குன்றிப் போகின்றன.

வாட்சமரில் வஞ்சகத்தால் காப்டன் பிளினை வீழ்த்திய மோர்கமை, அதே வஞ்சகத்தால் அழித்தொழிக்க எமிலியோ துணிவு கொண்டான்.

இருளும் ஒளியும் ஆட்சி செலுத்த, நடக்கும் மரணப்போராட்டத்தில் ஃப்ளோரெண்டின் தந்திரம் அரங்கேறும்போது எம் வாசிப்பின் அனுபவம் ஒரு உன்னத நிலையடைகிறது.

காப்டன் பிளினின் ஆன்மா எமிலியோவின் வாளை சுழற வைத்ததோ?

செத்து விழுந்த மோர்கம் செந்நண்டுகளின் இரையாகிறான். மரணத்தில் கூட நல்லடக்கம் என்றொரு மதிப்பை இழந்து...

 இது ஒரு நீதி, ஒழுக்கமற்றவர்களின் முடிவை பறைசாற்றும் நீதி.





ஈரலிப்பு ; எப்போதும் ஈரமாக இருக்கும் இடம்.
(நன்றி : நண்பருக்கு)

மண்டையோடு போன்ற மலைமுகடு, இங்கே வசிப்போரின் காத்திருப்பு "மரணமே" என்பதை மெய்ப்பிக்கிறதோ?







என்ன ஒரு பேரம்!







ஓவியரின் திறமையை பறைசாற்றும் அருமையான சித்திரம் ஒன்று.


அலைகடலில் பராகுடாவின் எழிலோவியம்.




காப்டன் பிளினின் ஆன்மா எமிலியோவின் வாளை சுழற வைத்ததோ?



செத்து விழுந்த மோர்கம் செந்நண்டுகளின் இரையாகிறான். மரணத்தில் கூட நல்லடக்கம் என்றொரு மதிப்பை இழந்து...

 இது ஒரு நீதி, ஒழுக்கமற்றவர்களின் முடிவை பறைசாற்றும் நீதி.





2 comments:

  1. Replies
    1. இந்த கதையை நீங்கள் வாசித்திருந்தால், கதை பற்றிய உங்கள் கருத்துகளையும் பகிர்து கொள்ளுங்கள்.

      Delete